தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணமும் பூர்வபுண்ணியமும்

Go down

திருமணமும் பூர்வபுண்ணியமும்  Empty திருமணமும் பூர்வபுண்ணியமும்

Post  meenu Sun Feb 03, 2013 12:54 pm


வணக்கம் நண்பர்களே இப்பதிவில் ஐந்தாவது வீட்டின் மூலம் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளை பார்க்கலாம். இந்த ஐந்தாவது வீடு என்பது பூர்வ புண்ணியஸ்தானம் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறது. பூர்வ புண்ணியத்தை வைத்து தான் இந்த பிறவியில் என்ன நல்லது நடக்கும் என்ன கெடுதல் நடக்கும் என்று சொல்லுவார்கள். இந்த ஒரு வீடு நல்ல இருந்தாலே போதும் நீங்கள் வாழ்க்கையில் மிகுந்த நல்ல வசதி வாய்ப்போடு வாழ்வீர்கள் என்று 75 சதவீதம் சொல்லிவிடலாம்.

இந்த வீடு திருமணத்திற்க்கு என்ன செய்கிறது என்று பார்க்கலாம் பூர்வ புண்ணியம் நன்றாக இருந்தால் தான் திருமணம் நடைபெறும். பூர்வ புண்ணியத்தில் சிக்கல் இருந்தால் திருமணம் நடைபெறாமல் போகும் அல்லது திருமண வாழ்வில் பிரச்சினையை உண்டு செய்து முன்பிறவி பாவத்தின் கணக்கை தீர்த்துக்கொள்ளும்.

இந்த ஐந்தாம் வீடு நல்ல இருக்கும்பட்சத்தில் எல்லா விசயத்திலும் நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள் இந்த ஐந்தாவது வீடு கெட்டால் மாற்று ஏற்பாடு ஏதாவது இறைவன் வைத்திருக்கிறா என்று கேட்டால இந்த வீட்டிறக்கு மாற்றாக குரு கிரகம் நல்ல இருந்தால் நல்லது நடக்கும். ஐந்தாவது வீட்டிற்க்கு காரகனாக குருவை வைத்திருக்கிறார்கள்.

இந்த பூர்வ புண்ணிய வீட்டைக்கொண்டு தான் உங்களுக்கு இருப்பது மென்மையான உள்ளமா அல்லது அடுத்தவரை கெடுக்கும் உள்ளமா என்று தெரியவரும். அதைப்போல உங்களின் காதலை காட்டும் இடமும் இது தான் உங்களின் குழந்தைகளை காட்டும் இடமும் இது தான்.

நாம் முதலில் காதலைப்பற்றி பார்ப்போம் இந்த ஐந்தாவது வீட்டில் நல்ல கிரகங்கள் தங்கியிருந்தால் சுகமான காதல் அனுபவங்கள் ஏற்படும் நல்லவர் காதலராக அமைவார். காதல் வானில் சிறகடித்து பறக்கலாம் அவரே உங்களுக்கு வாழ்க்கை துணைவராக அமைவார்.இந்த மாதிரி நடந்துவிட்டால நல்லது.

இந்த வீடு கெட்டால் உங்களை காதலில் விழ செய்து அந்த காதலை தோல்வியை அடைய செய்துவிடும். உங்களின் மனநிலை பழையதை நினைத்து ஏங்கசெய்துவிடும்.பிறகு என்ன உங்கள் மனநிலை பாதிப்படைய செய்யும். வாழ்க்கையின் மீது வெறுப்பு அடைந்து எங்கே சென்றால் நிம்மதி வரும் என்று நினைக்க தோன்றும்.

எனக்கு வரும் போன்களில் அதிகபட்சமாக கேட்கும் கேள்வியே நான் ஒருத்தரை காதலித்தேன். அவர் என்னை விட்டு போய்விட்டார். நான் ஒரு பெண்ணை காதலித்தேன் அந்த பெண் இப்பொழுது என்னுடன் பேசுவதில்லை எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. எனக்கு வழி சொல்லுங்கள் என்று தான் அதிகமாக கேட்கிறார்கள். நான் என்ன செய்வது

ஜாதகங்களில் இந்த வீடு கெட்டால் அதுபோல் நடந்து தான் தீரும். இடையில் வரும் கோச்சாரபலன்கள் மற்றும் தசாபுத்தி பலன்கள் உங்கள் காதலுக்கு வேட்டு வைத்துவிடும். நீங்கள் முதலில் காதல் செய்தால் திருமணத்தை உடனே வைத்துக்கொள்வது நன்மை அளிக்கும் இல்லை ஒவ்வொன்றாக பரிகாரம் செய்து முடிப்பதற்க்குள் உங்களின் துணைவருக்கு திருமணத்தை நடத்திவிடுவார்கள்.

இந்த வீடு கெட்டால் "பரதேச வாழ்வு" தான் இருக்கும் உங்கள் குடும்பத்தினரை விட்டு வெளியிடங்களில் வாழ வேண்டிய கட்டாயத்தை இந்த வீடு செய்யும். காதலில் ஒருவர் விழுவதற்க்கு தனிமை தான் முதல் காரணமாக இருக்கமுடியும் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஒருவர் தேவை என்பதால் காதலில் விழுந்துவிடுகிறார்கள்.

இந்த வீடு கெட்டால் உங்கள் ஊரில் வாழவேண்டிய கட்டாயம் இருந்தாலும் வாழாதீர்கள் ஏன் என்றால் வெளியிடங்களில் வாழ்ந்தால் தான் உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

குழந்தை ஸ்தானம் எனவும் ஐந்தாம் வீட்டை அழைப்போம். தனக்கு பிறக்கும் குழந்தைகளை காட்டகூடிய ஸ்தானம். திருமண வாழ்வில் குழந்தைகள் என்பது முக்கியமான ஒன்று. குழந்தைகள் இல்லை என்றால் அந்த திருமண வாழ்வு சிறக்காது. அந்த தம்பதினர் நல்ல இருந்தாலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கேள்வி கேட்டே பேச்சால் கொலை செய்துவிடுவார்கள். வேறு கிரக நிலைகளை வைத்து குழந்தை பாக்கியம் இருந்தாலும். அந்த குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகதான் இருக்கும்.

என்ன தான் இருந்தாலும் இந்த ஐந்தாவது வீடு திருமணத்தில் இப்படி விளையாடகூடாது என்று நினைக்க தோன்றுகிறதா இந்த வீட்டில் இது தான் இருக்கிறதா இன்னும் வேறு ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்துமா
வணக்கம் நண்பர்களே நேற்றைய பதிவில் ஐந்தாவது வீடு செய்யும் பிரச்சினை பார்த்தோம் அதன் தொடர்ச்சி இப்பதிவில் ஐந்தாவது வீட்டில் கெட்டகிரகங்கள் இருந்தால் என்ன செய்யும் என்றால் உங்களுக்கு பணத்தை நிறைய தரும். ஐந்தாம் வீட்டில் கெட்ட கிரகங்கள் இருந்து உங்களுக்கு பணம் தட்டுப்பாடு இல்லாமல் வந்தால் உங்களின் திருமண விசயத்தில் அல்லது குழந்தைகள் விசயத்தில் ஆப்பு அடிக்க போகிறது என்று அர்த்தம். உனக்கு பணத்தை இப்பொழுது கொடுப்பேன் டா அடுத்தது உன் மனநிம்மதிக்கு ஆப்பு அடிப்பேன் டா என்று நேரம் பார்த்துக்கொண்டு இருக்கும்.

அதிலும் ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்தால் இந்த பலனை கனகச்சிதமாக செய்வார் அவர் மூன்றாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்த்துவிடுவார் திருமண வாழ்வு அல்லது குழந்தைகளின் விசயத்தில் அருமையாக உங்களை விளையாடிவிடுவார்.இந்த வீட்டைப்பொருத்தவரை எந்த கிரகங்கள் உட்கார்ந்தாலும் பிரச்சினை தான். இதில் ராகு கேது உடகார்ந்தால் பித்ரு தோஷம் என்பார்கள் இதில் எந்த கிரகம் உட்கார்ந்தாலும் முன் ஜென்ம தோஷம் தான் என்பதில் சந்தேகம் இல்லை என்றே சொல்லலாம்.

ராகு கேது அமர்ந்தால் எப்படி வேலை செய்யும் என்றால் நீங்கள் ஒரு இண்டர்வியூ செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒவ்வொரு இண்டர்வியூ பாஸ் செய்து கடைசி இண்டர்வியூவில் உங்களை கவிழ்த்து விடுவார் கடைசி நிமிடத்தில் வேலை வாய்ப்பை இழப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் இந்த மாதிரி நடந்தால் அது ராகு கேது உங்களை ஐந்தாம் வீட்டில் இருந்து கெடுக்கிறார் என்று அர்த்தம்.

ஐந்தாம் வீட்டை வைத்துதான் நமக்கு குலதெய்வத்தின் அருள் இருக்குமா என்று சொல்லமுடியும் இந்த வீடு கெட்டால் குலதெய்வ அருள் கிடைக்காது எந்த அருளும் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும் பட்சத்தில் கிடைக்கும் என்று சொல்லலாம் அதைப்பற்றி இப்பொழுது நாம் பார்க்க வேண்டாம்.

இந்த ஐந்தாம் வீடு கெட்டால் நீங்கள் என்ன தான் உருண்டு புரண்டாலும் கடவுள் உங்களை பார்க்கவே மாட்டார் என்று தான் சொல்லவேண்டும். பின்பு எப்படி டா முன்னேறுவது என்று கேட்டால் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் துணையோடு வழிபாட்டை நடத்தவும் அல்லது உங்களின் நண்பர்களுக்கு ஐந்தாவது வீடு நன்றாக இருந்தால் அவர்கள் மூலம் வழிபாட்டை செய்யலாம். நாம சாமி கும்பிடுவதற்க்கு அடுத்தவன் துணை தேவைபடுகிறது என்றால் எவ்வளவு கொடுமை என்று பாருங்கள்.

ஒரு சில குடும்பங்களில் பார்த்தீர்கள் என்றால் பரிகாரம் செய்வதற்க்கு அல்லது கோவில் செல்லுவதற்க்கு சோதிடர்களை அழைத்துக்கொண்டு செல்வார்கள் ஏன் என்றால் சோதிடர்களுக்கு கேது அல்லது குரு பலம் நன்றாக இருக்கும் கோவிலில் இருக்கும் சக்தி நன்றாக கிரகத்து அடுத்தவர்களுக்கு கொடுக்கமுடியும் அதனால் சோதிடர்களை அழைத்துக்கொண்டு செல்வார்கள். நாங்களும் ஓசியில் ஊரை சுற்றி பார்ப்பதற்க்கு வசதியாக இருக்கும்.

இந்த ஐந்தாவது வீடு கெட்டது என்றால் அந்த ஆசாமி கொலை செய்யக்கூட தயங்கமாட்டான். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்தால் நீங்கள் அவனின் நட்பை விட்டு விலகி இருப்பது நன்மையளிக்கும். முன்ஜென்மத்தில் செய்த வில்லகத்தின் மீதி இந்த ஜென்மத்தில் இருக்கும் உங்களை கொல்வதற்க்கு கொஞ்சமும் தயங்கமாட்டார்கள்.

நீங்கள் சாதாரண மனிதனாக அடுத்தவரை பார்ப்பதற்க்கும் நீங்கள் சோதிடகாரனாக பார்ப்பதற்க்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் சோதிடர்கள் அதனால் ஒரு மனிதனை சோதிட கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும். வந்திருப்பவர யார் எதற்காக வந்திருக்கிறார் என்ன இவர் செய்வார் என்று அடுத்தவரை பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இல்லை சோதிடர்களாகிய நமக்கே ஆப்பு அடித்துவிடுவார்கள். ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் நம்மை காப்பாற்றிக்கொள்வது என்பது முதல் கடமை நமது வேலையே அடுத்தவரைப்பற்றி தெரிந்துக்கொள்வது தானே நாம கோட்டையை விடலாமா அதனால் சொன்னேன் நண்பர்களே. போதுமா பூர்வபுண்ணிய வீட்டை திருமணம் மூலம் பார்த்தது.

பூர்வ புண்ணியத்திற்க்கு என்ன பரிகாரம் செய்தால் நல்லது என்று நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் .
ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்தால் இந்த பலனை கனகச்சிதமாக செய்வார் அவர் மூன்றாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்த்துவிடுவார் திருமண வாழ்வு அல்லது குழந்தைகளின் விசயத்தில் அருமையாக உங்களை விளையாடிவிடுவார்.இந்த வீட்டைப்பொருத்தவரை எந்த கிரகங்கள் உட்கார்ந்தாலும் பிரச்சினை தான். இதில் ராகு கேது உடகார்ந்தால் பித்ரு தோஷம் என்பார்கள் இதில் எந்த கிரகம் உட்கார்ந்தாலும் முன் ஜென்ம தோஷம் தான் என்பதில் சந்தேகம் இல்லை என்றே சொல்லலாம். ////

ஐந்தில் ச‌னியிருந்தால் தத்துப்புத்திர‌ யோக‌ம் என்றும் உண்டு,அப்ப‌டியிருப்பின் குழ‌ந்தையின் சுய‌ ஜாத‌க‌ அமைப்பிற்குத் த‌குந்த‌வாறு கோவில்க‌ளில் சென்று எழுதி வைப்ப‌து ந‌ல்ல‌து.இல்லையெனில் ந‌ம்மைக்காலி செய்யும்,அல்ல‌து குழ‌ந்தையைக் காலி செய்துவிடும்.குழந்தையைக் காலி செய்தால் இருந்தயிடத்து வேலையைக் கச்சிதமாகச் செய்துவிட்டது என்று கொள்ளலாம்.இதை ந‌டைமுறையிலும் நான் பார்த்திருக்கிறேன். முடிந்த‌வ‌ரைக் குல‌தெய்வ‌ வ‌ழிபாடும், ராமேஸ்வ‌ரம் சென்று அக்னி தீர்த்த‌க்க‌ட‌லில் நீராடி சாமி த‌ரிச‌ன‌ம் செய்வ‌து ந‌ல்ல‌து.அத‌ற்கு அடுத்த‌ப‌டியெனில் காள‌ஹ‌ஸ்தி செல்ல‌லாம்.தென் த‌மிழ‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ராமேஸ்வ‌ரம், வ‌ட‌ த‌மிழ‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு காள‌ஹ‌ஸ்தி. அமாவாசை விர‌த‌ம் இருந்து பித்ருக் க‌ட‌ன் செய்வ‌தும் ந‌ல்ல‌து.

////இந்த ஐந்தாவது வீடு கெட்டது என்றால் அந்த ஆசாமி கொலை செய்யக்கூட தயங்கமாட்டான்.////

ம‌ன‌தைக்குறிக்கும் வீடாக‌ இருப்ப‌தால் அது சுத்த‌மாக‌ இருப்ப‌து உத்த‌ம‌ம்.அவ்வாறு பாவிக‌ள் கூடிவிட்டால் சந்திர‌னாவது(மனோகாரகன்) கெடாம‌ல் இருக்க‌வேண்டும்(வ‌ள‌ர்பிறை சந்திர‌னாக‌ அல்ல‌து பாவிக‌ள் சேர்க்கையின்றி இருப்ப‌து).பாவிகள் வலுத்துவிட்டால் மனம் கெட்டுவிடும் மனிதன் எதற்கும் அஞ்சமாட்டான்.

////செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்தால் நீங்கள் அவனின் நட்பை விட்டு விலகி இருப்பது நன்மையளிக்கும்.////

க‌டின‌மான‌ ஆசாமியாக‌ இருப்பார்க‌ள்,சில‌ரைப்பார்த்துச் சொல்வ‌து போல் கல் நெஞ்ச‌க்கார‌ர்க‌ள்.
வணக்கம் நண்பர்களே திருமணமும் பூர்வபுண்ணியமும் பகுதியில் இப்பதிவில் பரிகாரம் என்ன என்று பார்க்கலாம். எனக்கு ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் கெட்டுவிட்டது என்று கவலைபட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கவேண்டாம். அதற்கு என்ன வழி என்று பாருங்கள்.

திருமணத்தில் முடிந்தவரை நன்றாக தெரிந்தவரை துணைவராக தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அவர் நல்லவராக இருந்தால் எந்த தகுதியும் இல்லாமல் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்க்கைக்கு உத்திரவாதமாக இருக்கும். துணைவரை நாம் பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளை எப்படி தேர்ந்தெடுக்கமுடியும். குழந்தைகள் மீது அதிக பாசம் இல்லாமல் இருப்பது நல்லது. நாமே குழந்தைகள் நமக்கு ஏன் குழந்தைகள் என்று அரசாங்கத்தின் விளம்பரத்தை பார்த்து அதுபோல் நடந்துகொள்ள வேண்டியது நல்லது.

இராமேஷ்வரம் நல்ல பரிகார தலம் அங்கு சென்று ஒரு நாள் தங்கிவிட்டு மறுநாள் வாருங்கள். ராமநாதரை நன்றாக தரிசனம் செய்யுங்கள் வீட்டில் ராமன் பூஜை லிங்கத்தை வாங்கிவந்து தினசரி வணங்குகள்.


எனது வேறுபதிவில் சேதுபுராணத்தில் இருந்து ஒரு தகவலை தருகிறேன் படித்து பாருங்கள்

சேது புராணம் என்னும் புராணத்தில் பிரம்மஹத்தி தோஷம் விலக என்ன செய்யலாம் என்று ஒரு பாடல் கொடுத்து இருக்கிறார்.

பூந்தவிசி னிருந்தபிரான் முதலோர் காணப்
புண்டரிக மகள்கொழுநன் புகழி லங்கை
வேந்தனுயிர்ப் பழிகழுவு முகத்தால் யார்க்கும்
விடையவனே யுடையவனாம் வேத வாய்மை
யாந்தரங்கம் வெளிசெய்வா னனை வ ரோடு
மனைற்துகந்த மாதனத்தி லருச்சித் தேத்து
மேந்துபுனற் சடிலமுடி யிராம நாத
னிணையடிச்செந் தாமரைக ளிறைஞ்சி வாழ்வாம்.

பதுமாசனத்தில் இருந்த பிரம்ம தேவன் முதலானோர் காண (பங்கயவல்லியான) சீதாப் பிராட்டியின் கணவனான இராமன் இலங்கா புரிக்கிறையவனாகிய இராவணனுயிர் போக்கிய பிரம்மகத்தி தோஷத்தால் இலட்சுமணர் முதலானவர்களுடன் புறப்பட்டுக் கந்தமாதன பருவத்தை அடைந்து பூசனை செய்தேத்திப் போற்றும் கங்காதரனான இராமலிங்கனாய் எவர்க்கும் வேதாகம இரகசியத்தை உபதேசிக்க விடை மேல் வந்து தரிசனந்தருபனுடைய செந்தாமரைத் திருவடியிணைகளைச் சேவித்து வாழ்வாம்.

பூந்தவிசு = பதும ஆசனம்
புண்டரிக மகள் = பங்கயவல்லியான சீதை
கொழுநன் = கணவன்
இலங்னை வேந்தன் = இராவணன்
ஆந்தரங்கம் = அந்தரங்கம்.

திருமணமும் பூர்வபுண்ணியமும் பகுதி முடிவடைந்தது அடுத்த பதிவில் வேறு ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum