தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நுரையீரல் பலம் பெற...

Go down

நுரையீரல் பலம் பெற... Empty நுரையீரல் பலம் பெற...

Post  oviya Sat Jul 20, 2013 8:17 pm

1. இருமல்...

சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் இவை ஒவ்வொன்றும் 30 கிராம், அதிமதுரம் 50 கிராம் எடுத்து இவைகளை நன்றாக உலர்த்தி இடித்து சூரணமாக செய்து வைத்துக் கொண்டு, இத்துடன் குப்பை மேனி இலை மற்றும் அதன் இளம் தண்டு இவைகளை, நன்றாக உலர்த்தி சூரணம் செய்து 100 கிராம் அளவு எடுத்து, அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேளையும் ஒரு டீஸ்பூன் அளவு சூரணம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து உண்ணலாம். ஒரு வாரத்தில் சளி இருமல், உஷ்ண இருமல், புகை இருமல், வறட்டு இருமல் மற்றும் நாள்பட்ட இருமல் ஆகிய அனைத்தும் குணமாகும்.

2. நுரையீரல் பலம் பெற...

துளசி இலை ஒரு கைப்பிடி அளவு, 2 சிட்டிகை மிளகு தூள், சுக்குத் தூள் 2 சிட்டிகை, மல்லித்தூள் 2 சிட்டிகை, ஏலக்காய் 2 ஆகியவற்றை கால் லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பாதியாக வற்றியதும், வடிகட்டி... பால், சர்க்கரை சேர்த்து, தினமும் குடித்து வந்தால் நுரையீரல் தொடர்பான கபப் பிரச்சினைகள் தீர்ந்து நுரையீரல் பலம் ஆகும்.

3. எத்தகைய வாந்தியும்...

குடல் அடைப்பு, பூச்சிக் கோளாறு மற்றும் விஷமான உணவுகளால் தொடர் வாந்தி வரும். இதற்கு மிளகை வாணலியில் போட்டு சாம்பலாகும் வரை பொரிக்கவும். பின் சம அளவு மயில் இறகை சுட்டு சாம்பலாக்கி இரண்டையும் சமமாகக் கலந்து தேனில் குழைத்து சாப்பிட்டால் எத்தகைய வாந்தியும் நின்றுவிடும்.

4. அனைத்து வகை மூலம்...

மிளகு 25 கிராம், திப்பிலி 50 கிராம், சுக்கு 75 கிராம் மற்றும் காட்டுக் கருணைக் கிழங்கு 200 கிராம் ஆகியவற்றை உலர்த்தி, சூரணம் செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் 2 தேக்கரண்டி எடுத்து, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து, காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அனைத்து வகை மூலமும் குணமாகும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum