குருவாயூர் கிருஷ்ணன்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Page 1 of 1
குருவாயூர் கிருஷ்ணன்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங்கேற்கும் யானை ஒட்டம் நடைபெறுகிறது. கோயில் கிழக்கு கோபுர வாசலில் மஞ்சுளான் பகுதியில் நடைபெறும் இந்த ஓட்டத்தில் முன்னதாக கோயில் வளாகத்திற்குள் நுழையும் யானை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அடுத்த வருடம் நடைபெறும் திருவிழா வரை உற்சவமூர்த்தி வெற்றி பெற்ற யானை மீது அமர்ந்து நகர்வலம் செல்வார். மேலும் யானை ஓட்டத்தில் வெற்றி பெறும் யானை மற்ற கோயில் விழாக்களில் பங்கேற்காது. இன்று மாலை கோவில் தந்துரி சதீஸன் நம்பூதிரி, மேல்சாந்தி தேவதாஸ் பட்டதிரிபாடு ஆகியோர் தலைமையில் விழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து வரும் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குருவாயூர் கிருஷ்ணன்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
» திருச்செந்தூரில் பிப்.16-ல் மாசி திருவிழா துவக்கம்
» பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
» பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா துவக்கம்
» நயன்தாராவுடன் போய் குருவாயூர் கோயிலில் பிரபுதேவா காணிக்கை!
» திருச்செந்தூரில் பிப்.16-ல் மாசி திருவிழா துவக்கம்
» பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
» பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா துவக்கம்
» நயன்தாராவுடன் போய் குருவாயூர் கோயிலில் பிரபுதேவா காணிக்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum