தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீட்டில் அகிலத்திரட்டு அம்மானை இருந்தால் செல்வம் பெருகும்

Go down

 வீட்டில் அகிலத்திரட்டு அம்மானை இருந்தால் செல்வம் பெருகும் Empty வீட்டில் அகிலத்திரட்டு அம்மானை இருந்தால் செல்வம் பெருகும்

Post  ishwarya Thu May 23, 2013 6:10 pm

அகிலத்திரட்டு அம்மானை எனும் புனித நூலை நீங்கள் தொட்ட உடனேயே உங்கள் உடம்பில் இருக்கின்ற தீயசக்திகள் எல்லாம் உங்களை விட்டுப் பறந்தோடிவிடும். மேலும் நினைத்தாலே உங்கள் உள்ளத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் மறைந்துவிடும். அகிலத்திரட்டு அம்மாளை எனும் நூலைப்படிக்க ஆரம்பிக்கின்றபொழுது, எந்தவிதத்தடை வந்தாலும் பயப்படாதீர்கள், தயங்காதீர்கள் துணிந்து தொடர்ந்து படியுங்கள்.

எந்த வித உணவை நீங்கள் உண்டு விட்டாலும் எந்தவிதப் பாவமும் உங்களை நெருங்க முடியாது. எனவே தினமும் அகிலத்திரட்டு படிப்பதை கைவிடாதீர்கள். நீங்கள் இந்த நூலைப் படிக்கும் போதே நீங்கள் நினைத் தவை எல்லாம் நிறைவேறும், திருமணம் நடைபெறாது தவிப்பவர்களுக்குத் திருமணம் நடைபெறும்.

குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைச் செல்வம் கிடைக்கும். நோய்கள் எல்லாம் பறந்தோடிவிடும். எதிரிகள் அஞ்சி ஒதுங்கி ஓடுவார்கள். அகிலத்திரட்டு அம்மானை நூல் வீட்டில் இருந்தால், முன் வினைத்தோசம், தீயவினைகள், பேய் நடமாட்டம், ஆகியவை வீட்டை நெருங்காது. திருமணம், புதுமனைப் புகுவிழா போன்ற நல்ல நிகழ்ச்சி களுக்கும் ஏழைகளுக்கும் அன்பளிப்பாக இந்த நூலை வாங்கிக் கொடுக்கலாம். இதனால் உங்களுக்கு புண்ணியம் தேடி வரும்.

தாமரை ஜோதி..........

அய்யா வழியின் சமயச் சின்னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும். இதில் தாமரை 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யா வழியின் சின்னத்தில் பயன்படுத்தப்படும் தாமரை சஹஸ்ராரச் சக்கரமாதலால் இதன் தாமரைக்கு தண்டு வரையப்படாது.

ஏழு (மேல்) + ஏழு (கீழ்) என பதினான்னு இதழமைப்பு பொதுவாக வழக்கத்திலிருக்கிறது. மேலும் தாங்கல்களில் இச்சின்னத்தையே தலை கீழான தாமரை இதழ்களுடன் (சஹஸ்ராரத்தில் உள்ளது போல்) பயன்படுத்தும் ஒரு புதிய கட்டடிடக்கலையமைப்பு அன்மை காலத்தில் வழக்கத்துக்கு வந்திருக்கிறது.

துவையல் தவம்.........

மனதில் இருக்கும் அறியாமை அழுக்குகளை அகற்றி, தெய்வீக அனுபவம் பெற வைக்கும் "துவையல் தவம்'' என்கிற தவத்தை மேற்கொள்ளுமாறு எல்லோரையும் அய்யா வைகுண்டர் கேட்டுக் கொண்டார். அது என்ன துவையல் தவம்ப இந்த தவம் செய்பவர்களுக்கு மனத் தூய்மையுடன் உடல் தூய்மையும் அவசியம்.

அதனால், அந்த தவம் மேற்கொண்டவர்கள் தினமும் மூன்று வேளை கடலில் குளித்து புனிதம் பெற்றார்கள். உடல் தூய்மை பெற்றால் மாத்திரம் போதாது. உணவு கட்டுப்பாடும் அவசியம். பச்சரிசி, சிறுமணியை வேக வைத்து, அதையே உணவாக சாப்பிட வேண்டும். மேலும், அலைபாயும் மனதை நம் வசப்படுத்த தெய்வீக அனுபவத்தை பெற... சில போதனை வகுப்புகளும் அதில் இடம்பெற்றன.

காலையில் உகப்படிப்பு, மதியம் உச்சிப்படிப்பு, இரவில் உகப்படிப்பு மற்றும் உச்சிப்படிப்பு... என்கிற, பிரார்த்தனை பாடல்களை குருவாக இருந்து ஒருவர் சொல்ல.... மற்றவர்கள் பின்சொல்லும் பிரார்த்தனை வகுப்புகள்தான் அவை. இவ்வாறாக உடல்தூய்மையுடன், மனதூய்மையும் பெற்றவர்களை, நல்வழிப்படுத்த பல்வேறு அறிவுரைகளையும் அவர்களுக்கு வழங்கினார்.

வாழ்க்கை என்பது என்ன இல்லறம் எப்படி போற்றப்பட வேண்டும் என்பதில் தொடங்கி... ஆன்மீகம் என்பது என்ன என்பது வரை போதித்தார் அய்யா... இதோடு துவையல் தவம் நின்றுவிடவில்லை. அதில் ஈடுபட்டோரை கடற்கரையோரத்தில் தங்கச் செய்தார். கடும் வெயில், காற்று, மழை... என எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவத்தை அந்த தவத்தின் மூலம் அவர்களை பெறச் செய்தார். இப்படி பல்வேறுபட்ட பக்குவப்படுத்துதல்களால் துவையல் தவம் கொண்ட அனைவரும் புது மனிதராக தங்களை உணர்ந்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum