தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள்

Go down

உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள்  Empty உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள்

Post  ishwarya Tue May 07, 2013 11:50 am

வரலாற்று நூல்களே நமது கருவிகள்"
முனைவர் த. செயராமன் ஆய்வுரை

எழுத்தாளர்களின் சமூகக் கடமை கள் - வரலாற்று நோக்கில் என்ற தலைப் பில் - முனைவர் த.செயராமன் அவர்கள் ஆற்றிய உரையில் -

"எழுத்தாளர்கனின் சமூகக் கடமைகள் - வரலாற்று நோக்கில்" என்று பார்க்கும்போது வரலாற்று ஆய்வாளர்கள் தான் அந்த எழுத்தாளர்கள் என்று கூறி வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய கடமை இந்த சமூகத்தில் காத்திருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள் தவறினால் இந்த சமூகம் அல்லல்படும்; ஒரு எழுத்தாளன் தனக்காக எழுதக் கூடாது என்றும் சமூகத்திற்காகத் தான் எழுத வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.

மனித சமூகத்தில் இந்த பதிவுகள் அடைந்து விட்ட மாற்றங்கள் தான் வரலாறாகப் பரிணமிக்கின்றன. வரலாறு என்பது ஒரு சமூகத்தின் கடந்த காலம், சமூகம் நடந்து வந்த பாதை. வளர்ச்சி-வீழ்ச்சி-அடைந்த காயங்கள் இவற்றை தான் வரலாறு காட்டுகிறது. வரலாறு தவறாகப் - பொய்யாகப் பதிவு செய்யப்பட்டு விட்டால் - அந்தச் சமூகம் என்றாவது ஒரு நாள் விழித்து எழும்/ தமிழினம் தேய்ந்து கொண்டிருக்கிற ஒரு இனம். அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிற இனம். வரலாறு என்பது இப்போது புறக்கணிக்கப்பட்டிக்கிறது.. தங்கள் கடமைகளிலிருந்து வரலாற்று ஆய்வாளர்கள் தவறி இருக்கிறார்கள் வரலாற்றை ஆட்சியாளர்களின் விருப் பத்திற்கேற்ப எழுதுவதும் - வீணான ஆய்வுகளிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்வதுமாக வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் பங்கை புறக்கணித்துக் கொண்டிருக் கிறார்கள்.

வரலாற்றை மாற்றி அமைத்தவர்கள் வரலாற்று ஆய்வாளர்களாகவே இருந் திருக்கிறார்கள் ஒருகாலத்தில் தெய்வீக உறவுகளில் நம்பிக்கை இருந்தது. மன்னன் என்பவன் இறைவழி வந்தவன் என்ற காலகட்டம் இருந்தது. அந்த வரம்பில்லா முடிமன்னர்களுக்கு சாவுமணி அடித்தவன் கூட ஒரு வரலாற்று அரசியல் ஆய்வாளன் தான். சான் லாக் என்கிற இங்கிலாந்தின் அரசியல் ஆய்வாளன். அரசுகள் பற்றிய ஆய்வுகள் என்ற நூலை 1889இல் எழுதி னான். அந்த நூலில் அரசன் என்பவன் வேலைக்காரன் தான். இந்த மக்கள் ஒரு சமூக ஒப்பந்தத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த மக்கள் அரசிடம் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறார்கள். அரசு என்பது வேலைக்காரன் தான். எசமானன் அல்ல, எப்போது இந்த அரசு மக்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்யவில்லையோ அப்போது இந்த மக்கள் புரட்சி செய்யலாம் என்று புரட்சிக்கான உரிமையைப் பதிவு செய்து மக்களைச் சரியான திசையில் வழி நடத்தியவன் சான் லாக். அரசாங்கம் என் பது ஒரு இரவுக் காவல்காரன் போன்றவன். அவன் எசமானன் அல்லன். உங்களுக் கான நலன்களை உங்களால் தேர்ந்தெடுக்ப் பட்ட அரசு செய்யாவிட்டால் அந்த மக்க ளுக்குப் புரட்சி செய்யும் அதிகாரம் உண்டு.

சான் லாக் 17ஆம் நூற்றாண்டில் எழுதியதை நூறு ஆண்டு கழித்து சான் சபர்சன் என்பவன் அமெரிக்க விடுதலைப் போருக்கான புரட்சியைத் தன் எழுத்தினால் செய்தான். ரூசோ எழுதிய சோசியல் காண்ட்ராக்ட் என்ற நூலில் எல்லா மக்களும் தங்கள் பொது விருப்பத்தினை அளித்திருக்கிறார்கள். ஆகவே, எல்லா அரசாங்கங்களும் மக்களுக்குக் கீழ்ப்பட்டது தான் என்பதை எடுத்து வைத்தார். காட்டு மிராண்டிக் காலம் முதல் நிகழ்காலம் வரை அந்த சோசியல் காண்ட்ராக்ட் என்ற நூல் விளக்குகிறது. அதன் விளைவாகத் தான் பிரஞ்சுப் புரட்சி வெடித்தது என்றும் காரல் மார்க்சு எழுதியதும் ஒரு வரலாறு தான் அது அரசியல்-பொருளியல் ஆய்வு மட்டுமல்ல - வரலாற்றைப் பேசும் நூல், காரல் மார்க்சும் ஏங்கல்சும் அளித்த அந்த கம்யூனிச அறிக்கை ஒரு பெரும் வர லாற்றைப் பேசுவதாகவும் மனித சமுதாயம் சில விதிகளுக்கு உட்பட்டு வளர்வதாகவும் வர்க்கப் போராட்டமே சமூக மாறுதல் களுக்கு அடிப்படைக் காரணம் என்பதை காரல் மார்க்சு உணர்த்தினார் என்று கூறி சமூகம் தோன்றிய காலம் தொட்டு வரலாறு இருந்தது. வரலாறு வரலாறு என்று கடந்த காலத்தைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக நிகழ்காலத்தை எதிர்காலத்தை நோக்கி நடத்திச் சென்று இருக்கிறார்கள் நமது முன்னோர்கள். ஆகவே வரலாறு என்பது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. இலெனின் கூறியது போல ஒரு புதிய உலக கண்ணோட்டத்தை வழங்கியது என்றார்.

கடந்த காலத்தில் சான் லாக், ரூசோ, ஏங்கல்சு, காரல் மார்க்சு ஆகியோர் எல்லாம் ஒரு வரலாற்றைத் தான் தங்கள் நூல்கள் மூலம் தந்திருக்கிறார்கள், அது தான் அந்த மக்களைத் தட்டி எழுப்பி அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச் சென்றது.

தமிழினம் என்பது ஒரு தேய்ந்த இனம். உலகினுடைய மூத்த குடி. தொன் மையான மொழி. சுமேரிய-எகிப்திய நாகரி கத்தை உருவாக்கிய மக்கள். நெசவு செய்ய - கப்பல் கட்ட கற்றுக் கொடுத்த மக்கள். இன்று உலகெங்கும் அகதிகளாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை நாம் கொஞ்சம் ஆலோசிக்க வேண்டும். இந்த நாட்டிலே பிரச்னைகளை வரலாற்று ஆய்வாளர்கள் தொட்டு மக்களுக்குக் காட்ட வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் இந்து-இந்துத்துவம்-பார்ப்பனியம், மூடத்தனம் இவற்றை எல்லாம் கண்டனம் செய்யவில்லை நாம். இது தான் நமது பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது.

அப்படித் தான் இதுவரை நாம் எழுச்சி பெற்று வந்திருக்கிறோம். திடீர் என்று திராவிட இயக்கம் வந்துவிட வில்லை திடீரென தமிழினம் பீறிட்டு விடவில்லை. 1856இலே கால்டுவெல் என்கிற பாதிரியார் இங்கு வந்து ஒரு நூலை எழுதி அந்த நூலிலே அதுவரை அறியாத பல செய்திகளை அள்ளித் தந்ததன் விளைவாக திராவிட இயக்கம் துளிர்விட்டது, திராவிட மொழிகள் - வடமொழிக்கே அது மூலம் - திராவிடர்கள் சூத்திரர்கள் ஆக்கப்பட்ட வரலாறு இவற்றை எல்லாம் அறிஞர் கால்டுவெல் நமக்கு அவரது நூல் மூலம் கொடுத் துள்ளார். இந்த புதிய உணர்வு சினத்தோடு கூடிய போராட்ட உணர்வோடு தமிழினத் தின் கையிலே ஒரு புதிய கருவியாக வந்தது அதன் விளைவாகத் தான் சமூகத் தளத்தில் - அரசியல் தளத்தில் தமிழகம் முன்னேறியது. கால்டுவெல்லின் கருத்தை மக்களிடையே கொண்டு சென்றவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை.

வரலாற்றைத் தெற்கிலிருந்து தொடங்க வேண்டும் என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை வலியுறுத்தினார் அவர் கள் எல்லாம் மொழியியல் ஆய்வாளர்கள். தொல்லியல் இதைவிடச் சிறந்தது. இவர் களின் அடியொட்டி அரப்பா, மொகஞ்ச தரோ ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சி நடந்து தோண்டி எடுக்கப்பட்டன. அப்போது தான் தமிழ் தான் மூலம் என்பதும் தமிழர்கள் தான் முன்னோடிகள் என்பதும் தெரிந்தது. 1926 முதல் பி.டி.சீனிவாச அய்யங்கார் என்ற அந்த வரலாற்று அறிஞர் அருமையான நூல்கள் பலவற்றை வழங்கினார். அதன் விளை வாகத் தான் இந்தத் தமிழினம் விழித்துப் பார்த்தது. மொழியியல் ஆய்வாளர்களைத் தொடர்ந்து வரலாற்று ஆய்வாளர்கள் சில செய்திகளை அகழ்வாய்வுத் துணையோடு நமக்கு அளித்த அடிப்படையில் ஆரிய - திராவிட இனங்கள் என்று இரண்டு மானிட இனங்கள் இங்கே இருந்தன என் றாலும் இந்தியத் துணைக்கண்டத்திற்கு அடிப்படை தமிழ்ப்பண்பாடு தான்; ஆரியர்கள் தான் தெற்கு நோக்கிப் பரவினர் என்றும் முதலில் தோன்றி சிறந்தது தமிழ்நாடு என்ற கருத்து எல்லாம் இதன் மூலம் வலியுறுத்தப்பட்டது. தென்னிந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர்கள். இவர்கள் தான் இங்கிருந்து வடக்கு நோக்கி நகர்ந்தார்கள் என்று பி.டிசீனிவாச அய்யங்கார் தான் முதலில் வெளிப்படுத்தினார் என்றாலும் கார்த்திகேய முதலியார் இதே கருத்தையும் பின்னர் சேஷ அய்யங்காரும் இதே கருத்தை வலியுறுத்தினார்கள். மத்திய தரைக்கடல் பகுதிக்குத் தமிழன் தான் பண்பாட்டை எடுத்துச் சென்றான் என்ற கருத்தை அவர் எடுத்துரைத்தார். அப்பொழுது ஏனைய அறிஞர்கள் என்ன கூறிக் கொண்டிருந்தார் கள் என்றால் மத்திய தரைக் கடல் பகுதி யிலிருந்து தமிழர்கள் இங்கே வந்து குடியேறினார்கள் - ஆரியர்கள் பின்னால் வந்த வந்தேறிகள் - தமிழர்கள் அதற்கு முன்னால் வந்தவர்கள் என்று பாடம் படித் துக் கொண்டிருந்தார்கள். அந்த கருத்தாக் கத்தைத் தகர்த்தவர்கள் தான் பி.டி.சீனிவாச அய்யங்கார், சேஷ அய்யங்கார், இராம சந்திர தீட்சிதர் அவர்களும். மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து தான் எல் லோரும் இங்கே வந்தார்கள் என்று அதற்கு முன்பு பாடம் படித்துக் கொண்டிருந்தபோது சேஷ அய்யங்கார் தான் ஏன் தமிழர்கள் இங்கே இருந்து அங்கே போய் பரவி இருக் கக் கூடாதா என்று கேட்டார். அது போலவே இராமச்சந்திர தீட்சிதர் தென் னாட்டு பழங்குடிகள் பற்றி ஆய்வு நூலை எழுதினார். அதில் இந்த மண்ணின் மைந் தர்கள் தமிழர்கள் என்பதை நிறுவினார் எனவும் தமிழர்கள் தெற்கிலிருந்து வட மேற்கு நோக்கி நகர்ந்து உலகின் பல பாகங்களிலும் பரவினர் என்றும் எழுதினார். இப்படிப்பட்ட வரலாறு என்பது சுயசரிதை அல்ல. வாழ்வின் பாற்பட்டது. மாந்தவியல் பற்றியது. மொழியின் அடிப்படையில் கட் டப்பட்டது. இந்த வரலாறு தான் தமிழ் உணர்வாளர்களுக்கும் திராவிட இயக்க உணர்வாளர்களுக்கும் வலுவான கருவி களைக் கையிலே தந்தன எனக் கூறி ஆரி யத்தையும் பார்ப்பனீயத்தையும் எதிர்த்துப் போராடுகிறோம் என்றால் வரலாற்று ஆய்வாளர்கள் தந்த இந்த கருவிகள் தான் அதற்குக் காரணம் என்றார்.

அதற்குப் பிறகு தேவநேயப் பாவாணர் மொழியைப் பற்றிய கருத்து களை நமக்கு போதித்தார். 35 நூல்கள் எழுதிய தேவநேயப் பாவாணர் மாந்தர் இனம் தோன்றியது குமரிக் கண்டம் - ஞால முதல் மொழி தமிழே - திராவிட மொழி களுக்குத் தாய் - வடமொழிக்கு அது தான் மூலம் என்பதைத் தெளிவாகத் தன் ஆய்வு மூலம் வெளிக் கொணர்ந்தார். அதைத் தொடரவில்லை - அந்த மரபைத் தொடர வில்லை நாம். தமிழ் மொழிக்காக இயற்றிய அந்தத் தலைமுறை அதோடு நின்று போனது.

இந்த தலைமுறை - இந்த வர லாற்று அறிஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று சொன்னால் பட்டத்திற்காக பதவி களைக் குறி வைத்து ஆட்சியாளர்களின் மனத் திருப்திக்காக எழுதுகிறார்கள் இது தான் இன்றைய போக்கு; கடமை தவறக் கூடிய வரலாற்று அறிஞர்கள் வரலாற்றில் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் இவ்வளவு போராட்டங்களுக்கு இடையில் தான் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் வர லாற்று நூல்களை எழுதிக் கொண்டிருக் கிறார்கள் என்று கூறி தமிழர் பரவிய நாடுகள், தமிழன் இழந்த மண், உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்துமத பாசிசமும் போன்றவை எல்லாம் முழுமை யான வரலாற்று நூல்கள் என்று கூறினார். இப்படிப்பட்ட வரலாற்று நூல்கள் தான் நிலைக்கும்.

இந்த வரலாற்று நூல்கள் தான் நமக்கான கருவிகள் என்று கூறிய அவர் தமிழ் இனத்திற்கு அநீதி செய்து கொண்டு நெஞ்சுக்கு நீதி பற்றி எழுதிப் பயனில்லை என்றார். அது பயன்படாது. தமிழுக்கு அநீதி. அது ஒரு காலத்திலும் மக்களால் ஏற்கப்படாது. வரலாற்றை எழுதப் போகிறவர்கள் பா. விசய்யோ வாலியோ அல்ல. அவர்கள் அல்ல வரலாற்றை எழு தப்போகிறவர்கள். வரலாற்றை எழுதக் கூடிய வரலாற்று அறிஞர்கள் இதைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். வரலாறு எழுதப்படும். வரலாற்றில் தமிழ் இனத்திற்குத் துரோகம் செய்தவர்களுக்கு எட்டப்பனுக்குக் கிடைத்த நிலை தான் கிடைக்கும். கட்டபொம்மனுக்கு கிடைத்த புகழ் கிடைக்காது. இது தான் யதார்த்தம். இந்திய தேசியம் பொய் என்று இந்தியா என்று ஒரு நாடு இருந்ததே இல்லை என்று சொல்வதற்கு - இப்போதுள்ள வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதற்கு அச்சப் படுகிறார்கள். 1773க்கு முன்பு மையப்பட்ட அரசு முறை என்பதே - ஒழுங்குமுறைச் சட்டம் என்பதே வாரன் ஏஸ்டிங்க்சு கொண்டு வந்த ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு மையப்பட்ட ஒரு அரசே கிடையாது என்பதை வர லாற்று அறிஞர்கள் சொல்ல அஞ்சு கிறார்கள். அதற்கு முன் தமிழகம் இந்த இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததே இல்லை என்ற உண்மையான உயரிய கருத்தைச் சொல்ல அஞ்சுகிறார்கள். முதுகு சொரிந்து விட்டாவது துணை வேந்தர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்போது வரலாற்று அறிஞர்களின் பங்காக இது தான் இருக்கிறது. தமிழக வரலாறு என்று சொன்னால் இந்தியாவின் ஒரு பகுதி தமிழகம் என்று ஆரம்பிக்கிறார்கள். இந்தியாவின் ஒரு பகுதியாகத் தமிழ கத்தைக் கருதுகிறார்கள். காட்டுகிறார்கள். அல்ல. இந்தியா என்பது இப்பொழுது உருவானது. ஆங்கிலேயர்களின் வாய் நுனியால் உருவாக்கப்பட்டது. இந்தி என்று ஒரு மொழி வந்து 450 ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆனால் தமிழ் மொழியின் வயதை நம்மால் அளவிட்டுக் கூற முடிய வில்லை. வரலாறு எழுதப்பட வேண்டும். பி.டி.சீனிவாச அய்யங்காரின் பணி தொடரப்பட வேண்டும். உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாக அல்ல.
----------

"யாருக்கும் தமிழர்கள் அஞ்சத் தேவையில்லை"
பழ. நெடுமாறன் தலைமையுரை

மாநாட்டுத் தலைமையுரை ஆற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் உரை

இன்று காலை தொடங்கி இந்நேரம் வரையிலும் மிகப் பொறுமையுடன் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்னும் இறுதியாக வாழ்த்தரங்கம் ஒன்று உள்ளது. இங்கே பேசிய அத்தனை நண்பர்களும் வெவ்வெறு வகையான சொற்களால் பேசினாலும் உணர்ச்சி ஒன்றாகத் தான் இருந்தது. உலகப் பெருந் தமிழர் விருதினைப் பெற்றிருக்கக் கூடிய இந்த அறிஞர் கள் இதை விடச் சிறப்பான விருதுகளைப் பெற்றிருக் கிறார்கள் என்பது வேறு - அரசாங்க விருது கிடைத் திருக்கிறது என்பது வேறு - இது மக்களால் அளிக்கப் பட்ட விருது - தமிழர்களால் அளிக்கப்பட்ட விருது. இவர் களைப் பெருமைப்படுத்தியதன் மூலம் நாம் பெருமைப்பட இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது.

முன்னாலே பேசிய நண்பர்கள் வெவ்வேறு தலைப்பிலே உங்களுக்குப் பல விஷயங்களை மிக அழுத்தமாகப் பதிய வைத்தார்கள். நாம் ஒன்றுபட வேண்டும் - தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதுதான் எல்லோர் பேச்சிலும் ஒலித்தது. இன்றைக்கு தமிழினம் முக்கியமான காலகட்டத்திற்கு வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஒருகாலத்தில் பாராண்ட இனமாகவும் - ஒருகாலத்தில் தென்கிழக்காசிய நாடுகளை அடக்கியாண்ட இனமாகவும் - மேற்கே உரோமாபுரி கிழக்கே சீனா வரையிலும் பல நாடுகளுடன் வணிகம் நடத்தி செழுமை அடைந்த இனமாகவும் - நம்முடைய இனம் இருந்தது.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் இப்படிப் பல இலக்கியச் செல்வத்தை நிறையப் பெற்ற ஓர் இனமாக நம் இனம் விளங்கி வந்திருக்கிறது. எல்லாம் பழம் பெருமை. ஆனால் இன்றைக்கு நம் தமிழ் உலக அரங்கில் இடம் பெறத்தக்க நிலையை அடைந்திருக்கிறது. தமிழர்கள் - உலகத்தில் இருக்கக்கூடிய சிறந்த இனங்களில் ஒன்றாக ஆகி இருக்கிறார்கள். உலக மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. கணினித் துறையில் ஆங்கிலத்திற்கு இணையாகத் தமிழ் வளர்ந்து இருக்கிறது. இன்னும் கொஞ்சம் காலம் கடந்தால் ஆங்கிலத்தைத் தமிழ் விஞ்சும் என்னும் நிலை வரும்.

தமிழின் மதிப்பு கூடக்கூட அதற்கேற்றபடி தமிழர்களும் உயர வேண்டும். தமிழர்களின் நிலையும் உயரவேண்டும். தமிழும் தமிழர்களும் இணைந்து உயர்ந்தால் தான் நமக்கு வாழ்வு. ஒன்று உயர்ந்து ஒன்று உயரவில்லை என்றால் நமக்கு வாழ்வில்லை. உலகம் முழுவதிலும் தமிழர் எல்லா நாடுகளிலும் வாழ்கிறார்கள். இதற்கு முன் பேசிய நண்பர்கள் உலகின் பிற நாடுகளில் உள்ள தமிழர்கள் பற்றியும் ஈழத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகள் பற்றியும் - சொந்த மண்ணில் வாழ முடியாத அகதிகளாக வாழ்கிற புலம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றியும் பேசினார்கள்.

இப்படி ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் - நம்முடைய தமிழ்நாட்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர் களால் அழைத்துச் செல்லப்பட்டு, அடிமைகளாக உழைப்புச் சுரண்டப்பட்டு அதனால் ஆங்கிலேய வர்க்கம் கொழித்தது - அந்த வர்க்கத்திற்கும் இவர்களுக்கும் வேறுபாடு உண்டு. அதிலும் ரொம்ப முக்கியமானது என்று சொன்னால் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் நம் தமிழ் நாட்டிலிருந்தும், இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், அதே போல மொரீசியசு, ரீயூனியன், மற்றும் தென்ஆப்ரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் இப்படி பலவற் றிலும் நம் தமிழர்கள் கப்பல் கப்பலாகக் கொண்டு போகப்பட்டார்கள்.

அதிலும் யார் குறிப்பாக வெள்ளையர் விரித்த வலையில் சிக்கியவர்கள் என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த வலையில் சிக்கினார்கள். அக்கறைச் சீமைக்குப் போனால் நாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசையைக் காட்டி அவர்கள் ஏமாற்றப்பட்டு அழைத்துக் கொண்டு செல்லப்பட்டார்கள். அது ஒரு காரணம். இன்னொரு காரணம் சாதி ஒடுக்குமுறைத் தொல்லையிலிருந்து தப்பினால் போதும் என்று ஒடுக்கப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் வெளியேறத் துணிந்தனர்.

மேற்கண்ட நாடுகளில் எல்லாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் பரவினார்கள். தங்கள் உழைப்பினால் அந்நாடுகளை வளம் கொழிக்கச் செய்தார்கள் என்பது தான் உண்மை. ஆனால் அதற்கு ஏற்றவாறு வாழ்க்கைத்தரம் உயர்ந்ததா என்றால் இல்லை. இன்றைக்கும் அந்த நாடுகளில் அவர்கள் வாழ்விற்காகப் போராட வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறார்கள். அந்த தமிழ் மக்கள் 5-6 தலைமுறைகளாக அன்னிய மண்ணில் வாழ நேர்ந்த காரணத்தினால் அந்த மக்கள் தமிழை இழந்து கொண்டிருக்கிறார்கள். தென்ஆப்பிக்காவில் ஏறத்தாழ ஏழரை இலட்சம் பேர் வாழ்கிறார்கள். சில ஆயிரம் பேருக்குத் தான் தமிழ் தெரியும். ஆங்கிலம் தாய் மொழி ஆகிவிட்டது. மோரிசியஸ் வாழ் தமிழர்கள் பிரஞ்சு, கிரியோலி போன்றவற்றையும் பேசுகிறார்கள். தாய்த் தமிழகத்தின் அரவணைப்பு இல்லாமல் அவர்கள் எல்லாம் அங்கே மொழியையும், பண்பாட்டையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் மொழியை இழந்து இன்னும் தமிழர் என்னும் அடையாளத்தை இழக்க வேண்டிய அந்தக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதே நேரத்தில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் தங்கள் மொழியை-பண்பாட்டை- கலை-இசை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். அக்கறையாக இருக்கிறார்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழக்கூடிய ஈழத் தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தாலும் கடின உழைப்பின் காரணமாக ஓரளவிற்கு நல்ல வாழ்க்கையைப் பெற்ற பிறகு திருப்தி அடையவில்லை. மாறாக தங்கள் மொழி - தங்கள் பண்பாடு நிச்சயமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் - குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தரப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள். இன்று அந்த நாடுகளிலே தமிழர்களும் தமிழ்க் குழந்தைகளும் மொழி, பண்பாடு ஆகியவற்றுடன் வாழ்வதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

அதே காலகட்டத்தில் நம் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் புலம் பெயர்ந்த தமிழர்கள் கதி என்ன? இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து தங்கள் பண்பாட்டை, தங்கள் மொழியைக் காக்கவும் பாதுகாத்துத் தீர வேண்டும் என்றும் அந்தந்த நாடுகளில் போராடுகிறார்கள். ஆனால் நம்முடைய தாய்த் தமிழகத்திலிருந்து எந்த அரவ ணைப்பும் இல்லாததனால் மொழியை இழந்து பண்பாட்டை இழந்து எப்படியோ ஆகிவிட்டார்கள். இந்தப் போக்கு களை நாம் எவ்வளவு விரைவில் களைகிறோமோ அந்த அளவுக்கு உலக அரங்கில் தமிழர்கள் உயர்வார்கள் என்ப தில் சந்தேகம் இல்லை. அதை நாம் செய்தாக வேண்டும்.

இந்த போக்குக்குத் தாய்த் தமிழகத்தின் புறக்கணிப்பு மட்டும் காரணமா? அது ஒரு காரணம். மற்றொன்று முக்கியமானது. இந்திய அரசு தமிழர்களைப் புறக்கணிக்கிறது. இந்திய அரசு நம்முடைய வெளி நாடுகளில் வாழ்கிற தமிழ் மக்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. இந்தியாவில் வேறு எந்த தேசிய இனமும் வெளிநாடுகளில் இந்த அளவுக்குப் பெருந் தொகையாக வாழவில்லை. இலங்கை, மலேசியா, சிங் கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன், தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் நியமிக்கப்படும் இந்தியத் தூதுவர்கள் தமிழர்களாக இருந்தால் நல்லது. ஆனால் இதுவரை ஒரு தமிழன் கூட நியமிக்கப்படவில்லை. இந்தியா சுதந் திரம் பெற்ற போது மலேசியாவுக்கான இந்தியத் தூதுவராக டாக்டர் சுப்பராயன் முதன் முதலாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இன்றுவரை எந்த தமிழனுக்கும் அந்தப் பதவியைக் கொடுக்கவில்லை. மேற்கண்ட நாடுகளில் நாம் பெரும்பான்மையாக வெளிநாடுகளில் வாழ்கிறோம் - பெரும்பான்மையாக இருந்த போதிலும் கூட அவர் களுக்கு என்ன குறை? என்ன தேவை என்று அறிந்து அவற்றைச் செய்து கொடுப்பதற்கு மொழி அறியாத இந்தியத் தூதுவர்களால் முடியவில்லை. நேர்மாறான காரியங்களைத்தான் செய்கிறார்கள். இந்திய அரசு அதிலே மட்டும் அலட்சியப் போக்குக் காட்டவில்லை. கச்சத் தீவைத் தூக்கி இலங்கைக்குத் தாரை வார்த்தார்கள். அதனால் தமிழக மீனவர்கள் அங்கு செல்ல முடியாமல் அல்லற்படுகிறார்கள். ஏறத்தாழ 400 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். எந்த ஒரு நாடும் ஒரு போதும் இப்படிப்பட்ட செயலைச் சகித்துக் கொள்ளாது. பதிலடி கொடுக்கும் - எச்சரிக்கை தரும் - இறந்த மீனவர்களுக்கு இழப்பீடு வாங்கும். தமிழக மீனவர்கள் சிங்கள வல்லரசால் சுடப்பட்டாலும் ஒரு தம்பிடி கூட நட்டஈடு வாங்கப் படவில்லை. இந்திய அரசு வாங்கவில்லை.

அதுமட்டுமல்ல - இலங்கையிலிருந்து ஈழத்தை எந்த ஒரு நாட்டின் உதவியும் இல்லாமல் எந்த ஒரு அரசாங்கத்தின் ஆதரவும் இல்லாமல் மண்ணின் பெரும் பகுதியை மீட்டு - முழுமையாக மீட்க வேண்டும் என்ற உறுதியுடன் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்திய அரசு துணை நிற்கிறது. இராசீவ் காந்தி காலத்தில் இந்தியப் படை அனுப்பப்பட்டது. இப்போது படைக் கலன்களை அனுப்புகிறார்கள். நம் தமிழர்களைக் கொல்வதற்குத் தான் ஆயுதங்கள் என்று தெரிந்தும் கூட தொடர்ந்து அந்த தவறைச் செய்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஒன்று தெளி வாகத் தெரிகிறது. தமிழர்களை இந்தியர்களாக - இந்தியக் குடிமக்களாக நாம் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆறு கோடி தமிழர்கள் இந்த உண்மையை உணர வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கர்நாடகமும் கேரளமும் வஞ்சிக்கின்றன. தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொல்லும் துணிவு வருகிறது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய விவசாயிகள் இங்கே வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லை. துணிவும் இல்லை. எங்கே போய் முடியுமோ இது? எந்த அரசையும் நம்பி எந்த அரசியல் கட்சியையும் நம்பி தமிழர்கள் எதையும் நிலைநாட்ட முடியாது என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். ஆறு கோடி தமிழ் மக்கள் கட்சி, மதம், சாதி இல்லாமல் ஒன்றுபட்டு நம் உரிமைகளை நாமே நிலைநாட்டிக்கொள்வது என்று முடிவு எடுத்தாலொழிய எதுவும் செய்ய முடியாது. அந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தான் இந்த உலகத் தமிழர் பேரமைப்பு தொடர்ந்து பாடுபடுகிறது.

இது ஒன்றும் வேடிக்கைக்கான மாநாடு அல்ல. இவ்வளவு பேரை நாம் திரட்ட முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கான மாநாடு அல்ல. லாரிகளிலும் பஸ்களிலும் கூட்டம் கூட்டமாகக் கொண்டு சேர்க்கப்பட்ட கூட்டமல்ல இது. இயற்கையான உணர்வு படைத்தவர்கள் அவரவர் களாகச் சொந்தச் செலவிலே ஏதாவது ஒன்றை அடகு வைத்து வந்து இருப்பார்கள் - எனக்குத் தெரியும். இந்த உணர்வு என்பது அவ்வளவு எளிதிலே வந்து விடாது. அதைக் கண்டு அச்சமாக இருக்கிறது. எப்படி கூட்டம் கூட்டுகிறார்கள். நாம் ஒரு மாநாடு போட வேண்டுமானால் பல இலட்சம் செலவழித்து மக்களைக் கூட்ட வேண்டி யிருக்கிறது என்று நினைக்கிறார்கள். உணர்வின் அடிப் படையில் நாம் திரட்டுகிறோம். மக்களைத் திரட்டினால் தான் மாற்றம். அதை நாம் செய்ய வேண்டும். உலக மொழியாக நம் மொழி உயர்ந்து இருக்கிற இந்த நேரத்தில் உலகத்தில் உள்ள குறிப்பான இனமாகவும் தமிழன் மாற வேண்டும்.

நாம் பலமாக - ஒற்றுமையாக இருந்தால்தான் உல கத்தில் உள்ள தமிழர்களுக்கு - ஈழத்தில் உள்ள தமிழர் களுக்கும்- மலேசியத் தமிழர்களுக்கும் நம்மால் உதவ முடியும். உலகத்தின் பிற நாடுகளிலும் வாழும் தமிழர் களுக்கு நம்மால் உதவ முடியும். நாம் வலிவு இல்லாமல் போனால் நம்மையும் காத்துக் கொள்ள முடியாது நம்மைச் சார்ந்து இருக்கிற மற்ற தமிழர்களையும் நாம் காப்பாற்ற முடியாது.

1949ஆம் ஆண்டு செஞ்சீனம் பிறந்தது. பர்மா முதல் - பிலிப்பைன்சு வரை உள்ள தென்கிழக்காசிய நாடுகளில் சீனர்கள் பெருந்தொகையாக வாழ்கிறார்கள். மலேசியாவில் இரண்டாவது பெரிய இனமாகவும், சிங்கப்பூர், இந்தோனேசியாவில் இரண்டாவது பெரிய இனமாகவும் சீனர்கள் இருக்கிறார்கள். அப்போது மாசேதுங் சொன்னார்கள். ஆசிய நாடுகளில் வாழக்கூடிய சீனர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சொன்னார். இல்லையேல் செஞ்சீனா சும்மா இருக்காது என்றார். எனவே தான் இன்றளவும் சீனர்கள் என்றால் பயப்படுகிறார்கள். தமிழன் என்றால் அப்படிப்பட்ட நிலை இல்லை. வலிமையான செஞ்சீனம் தான் வெளிநாடுகளில் வாழும் சீனர்களைக் காக்கிறது.

வலிமை தான் நம் இனத்தைக் காக்க முடியும். அது தான் அத்தனை தமிழர்களுக்கும் பாதுகாப்பு. மறந்து விடாதீர்கள். இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமானால் தமிழர்கள் வலிமையோடு மாறவேண்டும். இல்லாவிட்டால் அவர் களுக்கு எதுவும் நடக்காது. காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் - நடுவர் குழு தீர்ப்புகள் வந்தால் உடனடியாக கர்நாடகாவிலுள்ள தமிழர்கள் உதைக்கப்படுகிறார்கள். விரட்டி அடிக்கிறார்கள். நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது எப்படி சரியாக இருக்க முடியும்? நம்முடைய வலிமையை நாமே உணரவில்லை. நாம் எத்தகைய மக்கள்? நம் வலிமை என்ன? நம்மை நாமே உணர வேண்டும். உணர்ந்தாலொழிய வேறு வழியில்லை. மீண்டும் வலிமையோடு எழுந்து நிற்க முடியும். யாராவது திசைதிருப்ப நினைத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நாம் தமிழர்கள் என்ற உணர்வோடு சகல பிரச்சினைகளைச் சந்திப்பதற்குத் தயாராக வேண்டுமென்று சொன்னால் தானாகவே திருந்தி விடுவார்கள்.. எவனும் வாலாட்டத் துணியமாட்டான். தமிழ்நாட்டு மீனவர்கள் 400 பேரை சிங்களப் படை கொல்லும் என்றால் - ஒரு இனம் வாழ்ந்து என்ன? போய் என்ன? நம்முடைய மீனவர்களை நம் கடல் பகுதியிலே வந்து அடிக்கிற துணிவு எப்படி வருகிறது? இந்திய அரசு தலையிடாது என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. அப்படியானால் தில்லியைப் பணிய வைக்க வேண்டுமென்றால் - இப்படியெல்லாம் நடந்தால் தில்லியுடன் மோதுவோம் என்ற உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் நடக்காது.

அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்றைக்கு உலக அரங்கில் பெரிய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்கள் ஓரளவிற்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கின்றன என்பதை என்னால் உணர முடிகிறது. அதை விரைவு படுத்த நம் கிளர்ச்சிகளை விரைவுபடுத்த வேண்டும். போராட வேண்டும். எல்லாம் செய்ய வேண்டும். இலங்கையில் இருந்து இருபது கல் தொலைவில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் - அவர்கள் சிறுபான்மை அல்ல. ஆறு கோடி தமிழர்களும் கிளர்ந்து எழுந்து விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட வேண்டும்.

மேற்கு நாடுகளில் அரசாங்க போக்குகளில் முழுமையான மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது மாறும். மாறுவதற்கு அதை விரைவு படுத்த வேண்டுமானால் நாம் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கிளர்ச்சிகளை மேலும் மேலும் பெருக்க வேண்டும். அப்படி பெருக்கினால் தான் அந்த மாற்றங் களை விரைவில் கொண்டு வர முடியும். எந்த நாடாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் அதன் இனம் கொதித்து எழு வேண்டும். கொதிப்பு இல்லாமல் இருந்தால் என்ன பயன்? இன்றைக்கு இந்த மாநாட்டிலே எனக்கு முன்னாலே பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேனாதிராசாவும் சிவாஜிலிங்கமும் என்ன சொன்னார்கள்? அவர்கள் பேச்சு நம் நெஞ்சத்தை உலுக்க வில்லையா? இவ்வளவு கொடுமை நடக்கிற பொழுது நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? என அவர்கள் கேட்டபோது நெஞ்சத்தை வாள் கொண்டு அறுப்பது போல் அல்லவா இருக்கிறது? அவர்கள் வேறு யாரிடம் போய் முறையிட முடியும்? நம்மிடம்தான் முறை யிட முடியும். நம் பதில் என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம்? தமிழ்நாட்டில் எழுச்சி மேலும் அதிகமாக வேண்டும். மேலும் மேலும் அதிகமாக வேண்டும். அச்சத்தைப் பயன்படுத்தி இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் நம்மை மிரட்டி வருகிறார்கள். அச்சமே இல்லை என்பதை நாம் காட்டினால் இந்த ஆட்சி என்பது எங்கே போகும் என்றே தெரியாது. மிரட்டுகிறவர்கள் எங்கே போவார்கள் என்று தெரியாது. தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் இவற்றால் புரட்சியின் முனையை மழுங்க வைக்க முடியாது. யாரையும் எதுவும் செய்து விட முடியாது. நீங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. ஆனந்தவிகடன் கருத்துக்கணிப்பு நடத்தியது. கருத்து கணிப்பு என்று வந்து பார்த்த போது நகரம்-கிராமம் இல்லாமல் மக்கள் எல்லோரும் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள் என்றுதான் கருத்துக் கணிப்பு நிரூபித்தது. மக்கள் எல்லாம் ஆதரவாக இருக்கக் கூடிய அந்த உணர்வு என்பது நீறு பூத்த நெருப்பு போல இருக்கும். ஊதினால் பற்றிக் கொள்ளும். உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக் கிறார்கள். ஆனந்த விகடனைப் பாராட்டுகிறேன். மக்களை ரொம்ப நாட்கள் யாரும் ஏமாற்ற முடியாது. புலிகள் புலிகள் என்று கூறிக்கொண்டு திடீர் வேட்டை நடக்கிறது. பொய்யான தகவல்களைத் தருகிறார்கள். தில்லியில் உள்ள எசமானர்கள் இவர்களை ஆட்டிப்படைக்கிறார் கள். மக்கள் துணிந்து எழுந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது. யாரும் எதற்கும் பயப்பட வேண்டிய தேவை யில்லை. என்ன பெரிய வலிமையான அரசாங்கம் இந்த அரசாங்கம்? பதினான்காம் லூயி, ஜார் மன்னர்கள் என்ன ஆனார்கள்? மிரட்டுகிற வேலை வேண்டாம். ஏனென்றால் மிரட்டுவதற்குக் கூட துணிவு கிடையாது. எங்களுக்குத் தெரி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum