தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தண்ணியடிக்காம தூங்க மாட்டான்! விஷால் இமேஜை டேமேஜ் செய்த ஆர்யா!

Go down

செய்த - தண்ணியடிக்காம தூங்க மாட்டான்! விஷால் இமேஜை டேமேஜ் செய்த ஆர்யா! Empty தண்ணியடிக்காம தூங்க மாட்டான்! விஷால் இமேஜை டேமேஜ் செய்த ஆர்யா!

Post  ishwarya Fri Apr 19, 2013 12:41 pm

அவன் இவன் சூட்டிங்கில் ஏற்பட்ட தலைவலியால் குவாட்டர் அடிக்க ஆரம்பிச்ச விஷால், இப்பல்லாம் நைன்ட்டி அடிக்காம தூங்குறதே இல்ல… என்று நடிகர் ஆர்யா கமெண்ட் அடித்தார். அவன் இவன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆர்யா, சக நடிகரான விஷாவை ரொம்பவே புகழ்ந்து (?)பேசினார்.

அவர் பேசுகையில், விஷால் இந்த படத்தில் பிரமாதமா நடிச்சிருக்கான். அதுவும் மாறுகண்ணோட நடிக்கறது சாதாரண விஷயமில்ல. அவனே அவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சிட்டு இருப்பான். பாலா சார், தம்பி அந்த லெப்ட் முழியை மேலே தூக்கு. இப்ப செஞ்ச பாரு. அதை அப்படியே ரைட்ல கொண்டு வாம்பார். என்னய்யா இந்தாளு நம்மளை மாறு கண்ணுன்னே நினைச்சுட்டாரு போலிருக்கேன்னு அலறுவான் விஷால். சூட்டிங் முடிஞ்சு ரூமுக்கு வந்தால் நரம்பெல்லாம் புடைச்சுருக்கும். தலைவலிக்குதேன்னு புலம்புவான். ஒரு குவார்ட்டரை அடிச்சுட்டு படு. எல்லாம் சரியாயிரும்னு சொல்லுவேன். அப்படியே அடிச்சு அடிச்சு இப்ப நைன்ட்டி இல்லாம து£ங்கறதே இல்லை அவன், என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் டைரக்டர் பாலா, விஷாலின் ஓவர் பந்தாவைப் பார்த்து ரொம்பவே எரிச்சல் பட்டதாக கூறினார். அவர் கூறும்போது, ஒருநாள் திடீர்னு ஆர்யா வந்தான். சார் நம்ம படத்தில் விஷால் நடிக்க ஆர்வமா இருக்காருன்னான். நான் அதெல்லாம் சரியா வராது. அப்புறம் பார்க்கலாம்னு சொன்னேன். இல்ல சார். ஒரு தடவ பார்த்து பேசுங்க. போதும்னான். நானும் கொஞ்சம் யோசித்து, சரி ரெண்டு நாள் கழிச்சு சொல்றேன்னு சொன்னேன். இல்ல சார். வாசல்லதான் விஷாலும் அவங்க அண்ணன் விக்கியும் நிக்கிறாங்க. உள்ள வரச்சொல்றேன். கொஞ்சம் சிரிச்சு பேசுங்க போதும்னு சொன்னான். என்னடா இப்படி இம்ச பண்றானேன்னு நினைச்சு வரச்சொல்லி பேசி அனுப்புனேன். அடுத்த நாள் ஏ.ஜி.எஸ் அகோரம் சார் வீட்டிலேர்ந்து பேசுறான். சார்… இது மாதிரி கல்பாத்தி அகோரம் சார்ட்ட பேசியிருக்கேன். வந்து ஒரு லைன் மட்டும் சொல்லிட்டு போயிருங்கன்னான். இப்ப முடியாதுப்பான்னு நான் சொல்றதுக்கு வழியே விடல.

ஆர்யாவும் விஷாலும் என்னை கூட்டிட்டு அவரு வீட்டுக்கே போயிட்டாங்க. ஆரம்பத்துல எனக்கு விஷால் மேல பெரிய அபிப்ராயம் இல்லை. எப்ப பார்த்தாலும் அவன் பின்னாடி ஒரு இருபது பேரு குடைய பிடிச்சிகிட்டே அலையுறாங்க. எனக்கு பயங்கர எரிச்சல் வரும். அப்புறம் எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. என் வாழ்க்கையில் நான் நாலு படம் பண்ணியிருக்கேன்.

அத்தனை தயாரிப்பாளர்களுடனும் கட்டி உருளாத குறைதான். ஆனால் இந்த படத்தில்தான் நான் நிம்மதியா வேலை பார்த்தேன். அதுக்காக கல்பாத்தி அகோரம் சாருக்கு நன்றி, என்றார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum