தனது மாணவிக்கு ‘லவ்’ லெட்டர் எழுதிய சொங்கி மங்கி!
Page 1 of 1
தனது மாணவிக்கு ‘லவ்’ லெட்டர் எழுதிய சொங்கி மங்கி!
12
filed
filed
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருமருகல் – ஆதலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பால்மோகன்.
இந்த பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியின் நோட்டு புத்தகத்தில் தங்கிலீஸ் முறையில் ஆங்கில எழுத்துக்களில் ஆசிரியர் பால்மோகன் காதல் கடிதம் எழுதியிருந்ததை வகுப்பு ஆசிரியர் கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து தலைமையாசிரியரிடம் வகுப்பு ஆசிரியர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆசிரியர் பால்மோகன் தான் தனக்கு காதல் கடிதம் எழுதியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, தலைமையாசிரியரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிவேலு ஆசிரியர் பால்மோகனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவரே காதல் கடிதம் எழுதியுள்ள செய்தி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாணவிக்கு மிட்நைட்டில் மிஸ்டு கால் கொடுத்த வாத்தி!
» மாணவிக்கு மிட்நைட்டில் மிஸ்டு கால் கொடுத்த வாத்தி!
» பள்ளி மாணவிக்கு ஆபாசகுறும் செய்தி அனுப்பிய ஆசிரியர்: நெஞ்சு வலியென கபட நாடகம்!
» குரோம்பேட்டையில் காதலிக்க மறுத்த நர்சிங் மாணவிக்கு அரிவாள் வெட்டு: கல்லூரி மாணவர் கைது
» தாலி கட்டும் நேரத்தில் மணமகள் காதலனுடன் ஓடியதால் மாணவிக்கு கட்டாய திருமணம்!
» மாணவிக்கு மிட்நைட்டில் மிஸ்டு கால் கொடுத்த வாத்தி!
» பள்ளி மாணவிக்கு ஆபாசகுறும் செய்தி அனுப்பிய ஆசிரியர்: நெஞ்சு வலியென கபட நாடகம்!
» குரோம்பேட்டையில் காதலிக்க மறுத்த நர்சிங் மாணவிக்கு அரிவாள் வெட்டு: கல்லூரி மாணவர் கைது
» தாலி கட்டும் நேரத்தில் மணமகள் காதலனுடன் ஓடியதால் மாணவிக்கு கட்டாய திருமணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum