உடற்பருமனும் உணவுப்பழக்கமும்
Page 1 of 1
உடற்பருமனும் உணவுப்பழக்கமும்
உடற்பருமனுக்கு
உணவுப் பழக்கம் மிக முக்கியமான ஒன்று. பலர் ருசிக்காகவும், பொழுது
போக்கிற்காகவும் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுக்ள, மாமிச வகைகள்
ஆகியவற்றை உண்கிறார்கள். இவை சர்க்கரை நோயைக் தூண்டக் கூடியவை என்பதையும்,
இதயத்திற்குத் தீங்கானது என்பதையும் யாரும் உணர்ந்து கொள்வதில்லை.
உணவுப் பொருட்களை கொழுப்புச் சத்து உள்ளவை, நார்ச்சத்து உள்ளவை என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
கொழுப்புச்
சத்துள்ள உணவுப் பொருட்களுள் மாமிச வகைகள், வறுத்த உணவு, எண்ணெய்ப்
பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய் நீக்கப்படாத பால், பால்
பொருட்கள், கிரீம்கள், இனிப்புப் பொருட்கள் ஆகியவை முக்கியமானவை.
இவையனைத்தும் சர்க்கரை வியாதியை அதிகப்படுத்துபவையும் கூட.
இவற்றை அதிகளவில் சாப்பிடும் போது தேவைக்கு அதிகமான கொழுப்பு சேர்த்து வைக்கப்பட்டு உடலின் அளவு பெரிதாகிறது.
நார்ச்சத்துப்
பொருட்களில் இத்தகைய கொழும்புச் சத்துகள் குறைவாகவே இருக்கும். தவிர
நார்ச்சத்துப் பொருட்கள் தேவையான சக்தியைத் தவிர மற்றவற்றை
வெளியேற்றிவிடுகின்றன.
சரி,
உணவுகளால் கொழுப்பு உண்டாகிறது என்கிறீர்கள் அது எவ்வாறு உண்டாகிறது, அது
எவ்வாறு சர்க்கரையைத் தூண்டுகிறது. இதயத்தைப் பாதிக்கிறது, பாலுறவுக்
குறைபாட்டை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?
சர்க்கரை
நோய் இருக்கும்போது ஏற்கனவே சக்திகள் சரியாக பிரிக்கப்படாமலும்,
செல்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காமலும் போகும். நோயின் பாதிப்பினால்
இரத்த நாளங்கள் நைந்திருக்கும் நிலையில் கொழுப்பும் சேர்ந்து அவற்றை
சுருக்குவதால், இதயத்திலிருந்து நாளங்களுக்குச் செல்லும் இரத்தம் சீரான
வேகத்தில், சீரான அளவில் செல்ல இயலுவதில்லை.
இதனால்
இரத்த வேகம் அதிகரித்து இரத்த நாளங்கள் ஆங்காங்கே சிதைந்து போகும்.
கொழுப்புகளால் மிகச்சிறிய சிரை நாளங்கள் பாதிக்கப்பட்டால் செல்களுக்கு
இரத்த ஓட்டம் இருக்காது. இந்நிலை ஆணுறுப்புக்கு இரத்தத்தை கடத்தும்
நாளங்களில் ஏற்படும் போது ஆண்மை எழுச்சி உண்டாவதில்லை. பெண்ணுக்குக்
கடத்தப்படும் போது பெண்மைக்கு எழுச்சியும் இருக்காது. உடல் நலம் விரைவாக
கேடுற்று பக்கவாதமாகவோ, மாரடைப்பாகவோ, இரத்த நாளம் அழுகுவதிலோ போய்
முடியும்.
உணவுப் பழக்கம் மிக முக்கியமான ஒன்று. பலர் ருசிக்காகவும், பொழுது
போக்கிற்காகவும் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுக்ள, மாமிச வகைகள்
ஆகியவற்றை உண்கிறார்கள். இவை சர்க்கரை நோயைக் தூண்டக் கூடியவை என்பதையும்,
இதயத்திற்குத் தீங்கானது என்பதையும் யாரும் உணர்ந்து கொள்வதில்லை.
உணவுப் பொருட்களை கொழுப்புச் சத்து உள்ளவை, நார்ச்சத்து உள்ளவை என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
கொழுப்புச்
சத்துள்ள உணவுப் பொருட்களுள் மாமிச வகைகள், வறுத்த உணவு, எண்ணெய்ப்
பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய் நீக்கப்படாத பால், பால்
பொருட்கள், கிரீம்கள், இனிப்புப் பொருட்கள் ஆகியவை முக்கியமானவை.
இவையனைத்தும் சர்க்கரை வியாதியை அதிகப்படுத்துபவையும் கூட.
இவற்றை அதிகளவில் சாப்பிடும் போது தேவைக்கு அதிகமான கொழுப்பு சேர்த்து வைக்கப்பட்டு உடலின் அளவு பெரிதாகிறது.
நார்ச்சத்துப்
பொருட்களில் இத்தகைய கொழும்புச் சத்துகள் குறைவாகவே இருக்கும். தவிர
நார்ச்சத்துப் பொருட்கள் தேவையான சக்தியைத் தவிர மற்றவற்றை
வெளியேற்றிவிடுகின்றன.
சரி,
உணவுகளால் கொழுப்பு உண்டாகிறது என்கிறீர்கள் அது எவ்வாறு உண்டாகிறது, அது
எவ்வாறு சர்க்கரையைத் தூண்டுகிறது. இதயத்தைப் பாதிக்கிறது, பாலுறவுக்
குறைபாட்டை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?
சர்க்கரை
நோய் இருக்கும்போது ஏற்கனவே சக்திகள் சரியாக பிரிக்கப்படாமலும்,
செல்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காமலும் போகும். நோயின் பாதிப்பினால்
இரத்த நாளங்கள் நைந்திருக்கும் நிலையில் கொழுப்பும் சேர்ந்து அவற்றை
சுருக்குவதால், இதயத்திலிருந்து நாளங்களுக்குச் செல்லும் இரத்தம் சீரான
வேகத்தில், சீரான அளவில் செல்ல இயலுவதில்லை.
இதனால்
இரத்த வேகம் அதிகரித்து இரத்த நாளங்கள் ஆங்காங்கே சிதைந்து போகும்.
கொழுப்புகளால் மிகச்சிறிய சிரை நாளங்கள் பாதிக்கப்பட்டால் செல்களுக்கு
இரத்த ஓட்டம் இருக்காது. இந்நிலை ஆணுறுப்புக்கு இரத்தத்தை கடத்தும்
நாளங்களில் ஏற்படும் போது ஆண்மை எழுச்சி உண்டாவதில்லை. பெண்ணுக்குக்
கடத்தப்படும் போது பெண்மைக்கு எழுச்சியும் இருக்காது. உடல் நலம் விரைவாக
கேடுற்று பக்கவாதமாகவோ, மாரடைப்பாகவோ, இரத்த நாளம் அழுகுவதிலோ போய்
முடியும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum