தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் மகள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் உள்ளாள். திருமணத்திற்கு வரன் தேடும்போதுதான் அவள் வேறொருவரைக் காதலிப்பதாக சொன்னாள். இரு வீட்டாருக்கும் இதில் சம்மதமில்லை. இதையும்விட, இவள் மதம் மாறினால்தான் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் நிபந்தனை விதிக்கிறார்கள். மகள

Go down

 என் மகள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் உள்ளாள். திருமணத்திற்கு வரன் தேடும்போதுதான் அவள் வேறொருவரைக் காதலிப்பதாக சொன்னாள். இரு வீட்டாருக்கும் இதில் சம்மதமில்லை. இதையும்விட, இவள் மதம் மாறினால்தான் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் நிபந்தனை விதிக்கிறார்கள். மகள Empty என் மகள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் உள்ளாள். திருமணத்திற்கு வரன் தேடும்போதுதான் அவள் வேறொருவரைக் காதலிப்பதாக சொன்னாள். இரு வீட்டாருக்கும் இதில் சம்மதமில்லை. இதையும்விட, இவள் மதம் மாறினால்தான் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் நிபந்தனை விதிக்கிறார்கள். மகள

Post  meenu Fri Feb 01, 2013 1:08 pm

காதலிப்பது என்பது வயது சம்பந்தமான விஷயம்தான். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், இன்னொரு விஷயத்தையும் கொஞ்சம் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

அதாவது, இப்போது செய்து கொண்ட திருமணம் பத்து, பதினைந்து வருடங்கள் கழித்து எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

திருமணம் என்பது தங்கள் வாழ்க்கை எனும் சுயநலத்தை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, அடுத்த தலைமுறை நடந்து போக வேண்டிய நீண்ட பாதை என்பதையும் மறந்து விடக்கூடாது. தந்தை வீடும், தாய்வீடும், புகுந்தவீடும் ஒரு பெண்ணால்தான் ஓங்கி வளர முடியும்.

எங்கேனும் புறக்கணிக்கப்பட்டால் அன்பில்லாத பாலைவனம் போன்ற வாழ்க்கை அமைந்து விடும். பெற்றோர் செய்து வைக்கும் திருமணத்தில் மட்டும் பிரச்னை இருக்காதா என்ற கேள்வியை காதலிப்போர் கேட்கக் கூடும். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டதில் பிரச்னைகள் வரலாம்.

ஆனால் வளராது. அல்லது என்னாச்சு, என்று கேட்பதற்காவது நாலு பேர் வருவார்கள். வீட்டுக்கு வீடு வாசப்படி என்று சொல்லித் தேற்றுவார்கள். சுமுகமான தீர்வுக்கு முயற்சிப்பார்கள்.

ஆனால் காதல் திருமணத்தில் பிரச்னை என்று வந்து விட்டால், ‘நான் சொன்னேனே கேட்டியா, தான் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கிட்டா’ என்றெல்லாம் ஊர் பேசக் கூடும்.

பிரச்னைகளைக் காட்டிலும் பிரச்னை வந்துவிடக்கூடாதே என்ற பயத்திலேயே, பலருக்கு பாதி காலம் சென்று விடுவதை நான் பார்த்திருக்கிறேன். இதைச் செய்யாதே, அதைச் செய் என்று கட்டளையிட பெற்றோர் தவிர வேறு யாருக்கும் அதிகாரமில்லை.

பிள்ளைகளுக்கு அவர்களைக் காட்டிலும் அன்பும் அக்கறையும் கொண்டவர்கள் வேறு யார் இருக்க முடியும்? ஆனாலும், உலக நடப்பில் உள்ளதை எடுத்துக்காட்டும் உரிமையோடு சிலவற்றை சொன்னேன். யோசித்து முடிவெடுக்கச் சொல்லுங்கள்.

வாழ்க்கை சினிமா போல் மூன்றுமணி நேரத்தோடு முடிந்து விடுவதல்ல. மூன்று தலைமுறைக்கும் மேற்பட்ட விஷயம். காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்துதான் ஆகவேண்டும்.

ஆனாலும், இறைவன் என்ன நினைக்கிறான் என்று தெரியாது. எனவே, தங்கள் பெண்ணை அம்பாள் படத்தின் எதிரில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லச் சொல்லுங்கள்.

காலை, மாலை இரு வேளைகளிலும் 28 தடவை இந்த ஸ்லோகத்தைச் சொல்லி நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். எல்லோரும் மனம் மகிழும்படியாக நல்ல தீர்வைக் காண்பீர்கள்...

பதிர்மே ஹார்திகம் பூயாத்
ஆர்த்தி நாசின்யை
பகவத்யை நமோநம:
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என் மகள் பொறியியல் பட்டதாரி. வயது 24. தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளாள். பிறவி முதல் ஒரு கண் பார்வையை இழந்தவள். திருமணம் நடந்தேற பரிகாரம் கூறிட வேண்டும்.
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» படித்து பணியிலுள்ள எனக்கு கல்யாணத்துக்கு வரன் தேடினார்கள். என் துறையைச் சேர்ந்தவரையே பார்த்தார்கள். இரு வீட்டாருக்கும் சம்மதம்தான். ஆனால் நாள் நிச்சயிக்கும் ஜோதிடர், ஏதோ ஒரு தோஷம் இருப்பதாகக் கூறி, ‘இந்தத் திருமணம் இனிக்காது’ என்றார். இரு வீட்டாரும் என்ன
» என் மகள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். நன்கு படித்தும் மார்க் குறைவாக எடுக்கிறாள். என் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்கிறார். கஷ்டத்துடன்தான் படிக்க வைக்கிறோம். அவள் படித்து முன்னேற பரிகாரம் சொல்லுங்கள்.
» எனது திருமணத்திற்காக வரன் பார்த்து வருகிறோம். முடிவதுபோல் இருந்து தடைபடுகிறது. எங்கு போனாலும் ஏன் திருமணம் ஆகவில்லை என கேட்கிறார்கள். தாய், தந்தையின் மனம் வேதனைப்படுகிறது. எனக்கு நல்ல வரன் அமைய வழி சொல்லுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum