தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை சைவ, வைணவ கோயில்களில் ரத சப்தமி சிறப்பு வழிபாடு

Go down

மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை சைவ, வைணவ கோயில்களில் ரத சப்தமி சிறப்பு வழிபாடு Empty மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை சைவ, வைணவ கோயில்களில் ரத சப்தமி சிறப்பு வழிபாடு

Post  ishwarya Fri May 24, 2013 12:14 pm

சென்னை: ரத சப்தமியை முன்னிட்டு சைவ கோயில்களிலும், வைணவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி புறப்பாடு, தேரோட்டம் நடந்தது.
மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். தேர் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூங்கா நகர் கந்த கோட்டம் கந்தசாமி கோயிலில் காலை 10.30 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமரசாமிக்கு பன்னீர் அபிஷேகம், ராஜ அலங்காரம் நடந்தது. இரவில் தங்கத்தேரோட்டம் நடந்தது.

மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 7 வாகன புறப்பாடு நடந்தது. காலை 6 மணிக்கு சூரிய பிரபையும், 7 மணிக்கு கருட சேவையும், 10 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளலும், 11 மணிக்கு அம்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளலும் நடந்தது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 7 குதிரைகள் பூட்டப்பட்ட சூரிய பிரபை வாகனத்தில் பார்த்தசாரதி எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஞாயிறு விடுமுறை நாளில் ரத சப்தமி வந்ததால் சென்னை மாநகரில் உள்ள எல்லா கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நூற்று எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை, ரங்கநாதப் பெருமாள் கோயிலில் ரதசப்தமி பெருவிழா நேற்று நடந்தது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நடப்பதை போன்று சிறப்பாக இருந்தது. அதிகாலை நடை திறக்கப்பட்டது. காலை 6மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் ரங்கநாதர் எழுந்தருளினார். தொடர்ந்து 8 மணிக்கு ஹனுமந்த வாகனம், 10மணிக்கு கருட சேவை, பிற்பகல் 12மணிக்கு சேஷ வாகனம், மாலை 3மணிக்கு குதிரை வாகனம், 5மணிக்கு சிம்ம வாகனம், இரவு 7மணிக்கு சந்திர பிரபை வாகனம் உட்பட ஏழு வாகனங்களில் மலையை சுற்றியுள்ள மாடவீதிகளில் ஆபரண அலங்காரத்துடன் பெருமாள் உலா நடந்தது.

பகல் 1மணிக்கு கோயிலுக்கு எதிரே உள்ள புனித நீர் குளத்தில் திருமஞ்சனம் தீர்த்தவாரி நடந்தது. விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் மூலவர்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நீர்வண்ணபெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் அம்.வெள்ளைச்சாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை சைவ, வைணவ கோயில்களில் ரத சப்தமி சிறப்பு வழிபாடு
»  மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை சைவ, வைணவ கோயில்களில் ரத சப்தமி சிறப்பு வழிபாடு
» புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு
»  இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» குழந்தைகளுக்காக சிறப்பு வழிபாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum