தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மேல்மலையனூர் கோயிலில் மயான கொள்ளை விழா

Go down

  மேல்மலையனூர் கோயிலில் மயான கொள்ளை விழா Empty மேல்மலையனூர் கோயிலில் மயான கொள்ளை விழா

Post  ishwarya Thu May 23, 2013 5:35 pm

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் நடந்து வரும் மாசி பெருவிழாவை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பூக்கள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. உட்பிரகாரத்தில் உற்சவருக்கு பலவித பூ மாலைகள், எலுமிச்சை பழம் மாலைகள் சூட்டி 8 கரங்களில் கத்தி, உடுக்கை, சக்கரம், சூலம், கபாலம், சங்கு ஏந்தியவாறு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

மக்கள் தங்களது பிராத்தனைகள் நிறைவேற கொழுக்கட்டை, சுண்டல், வேர்கடலை, மிளகாய் உள்ளிட்டவற்றை படைத்தனர். பின்னர் அங்காளம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் பலர் அருள்வந்து ஆடியது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி செய்திருந்தார். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum