தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈசனின் ருத்ர அவதாரம் -ஆஞ்சநேயர்

Go down

 ஈசனின் ருத்ர அவதாரம் -ஆஞ்சநேயர் Empty ஈசனின் ருத்ர அவதாரம் -ஆஞ்சநேயர்

Post  ishwarya Thu May 23, 2013 5:24 pm

கிழக்குப் பார்த்த சந்நதியில் சதுர்புஜ ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களோடு, உலகளந்த பெருமாளை நோக்கியவாறு கும்பிடும் நிலையிலும், மற்ற இரண்டு திருக்கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் சக்கரத்தை ஏந்தியும் வேண்டுவோர்க்கு வேண்டியவாறே அருள்புரிந்து வருகிறார். இவரது இந்தக் கோலம் எங்கே காணக்கிடைக்கிறது? பெரிய காஞ்சிபுரம் உலகளந்தார் சந்நதி வீதியில் தான். தம்மை நாடி வருவோர் தன்னிடம் சமர்ப்பிக்கும் வேண்டுகோளை உடனே நிறைவேற்றித் தரும் ஈசனின் ருத்ர அவதாரமாக இந்த சதுர்புஜ ஆஞ்சநேயர் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இவர் எந்த கிரகத்திற்கும் (நவகிரகங்கள்) கட்டுப்பட்டவர் அல்ல என்பதால், கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இவரை வணங்கிச் செல்கிறார்கள். இந்த சதுர்புஜ ஆஞ்சநேயரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் வடை மாலை மற்றும் துளசி மாலையை அணிவித்து வழிபடக் காணலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum