தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வைகாசி விசாக விரதம்

Go down

வைகாசி விசாக விரதம் Empty வைகாசி விசாக விரதம்

Post  ishwarya Thu May 23, 2013 2:07 pm

வைகாசி மாத மதி நிறைந்த நன்னாள் வைகாசி விசாகமாகும். திருமுருகன் உலகமுய்யத் தோன்றியதால் திருமுருகன் வீற்றிருக்கின்ற கோயில்களிலும், அறுபடை வீடுகளிலும் விசாக வழிபாடு சிறப்பாக நடைபெறும். புத்தர் அவதரித்ததும் வைகாசி விசாகத்தில் தான். புத்த பூர்ணிமா என பவுத்தர் இதனைக் கொண்டாடுவர்.

இந்நன்னாளில் நம்மாழ்வார் அவதரித்தருளினார். தெற்கு திசையின் திக்பாலகரான யமதர்ம ராஜனுக்குரியது வைகாசி விசாகமே. வைகாசி விசாகமும் தேய்பிறை கிருஷ்ணபட்ச சதுர்த்தியும் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து விட்டால் யமன் இந்நாளை பலமடங்கு உகப்பாக புராணங்கள் கூறும்.

குருவின் நட்சத்திரம் விசாகம். இட்சுவாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாகக் கருதப்பட்டதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம-ராவண யுத்தம் நடந்ததாக ஸ்ரீமத் ராமாயணம் கூறும். அகோபிலம் எனப்படும் சிம்மாலத்து நரசிம்ம மூர்த்திக்கு வருட முழுதும் சாத்தப்பட்டிருக்கும் சந்தனக் காப்பினை இந்நாளிலேயே களைவார்கள்.

வைகாசி விசாகத்திலே காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு கருட சேவை நடைபெறும். குடந்தை ஆதிகும்பேசுவரர் திருக்கல்யாணம் வைகாசி விசாகத்திலே நடைபெறும். திருவேட்களத்தில் அர்ச்சுனனுக்கு பரமன் பாசுபதாஸ்திரம் வழங்கிய விழா கொண்டாடப் பெறுவது வைகாசி விசாகத்தன்று தான்.

கன்னியாகுமரி அம்மனுக்கு ஆராட்டு விழா வைகாசி விசாகத்திலே தான். திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் வைகாசி விசாகத்திலே சித்தி அடைந்ததால் அவரது குருபூஜை நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum