கர்ப்பிணிகளே, நார்ச்சத்து உணவுகளை நிறைய சாப்பிடுங்க!
Page 1 of 1
கர்ப்பிணிகளே, நார்ச்சத்து உணவுகளை நிறைய சாப்பிடுங்க!
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் அவசியம் அதுவும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மகப்பேறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது கர்ப்பகாலத்திற்கு மட்டுமல்லாது பிரசவ சமயத்திலும், குழந்தை பிறந்த பின்னும் தாய்மார்களுக்கு ஏற்றது எனவேதான் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மலச்சிக்கல் பிரச்சினை
கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது. எனவேதான் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர்
நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது.அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும்.
மேலும் பாதாம் பருப்பு, பீன்ஸ், கீரைகள், பூசணிக்காய், பேரிக்காய், ப்ளாக் பெரிஸ், பயறுவகைகள், வேகவைத்த உருளைக்கிழங்கு, வாழைப்பழம், ஆரஞ்சு, போன்றவைகள் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவற்றை கர்ப்பிணிகள் தவறாமல் தங்கள் உணவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் சரியான அளவு தண்ணீர் பருகவேண்டும். இது மலச்சிக்கலை நீங்கும்.
கால்சிய உணவுகள்
15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. மேலும் தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். அதில் புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.
உப்பு, காரம் வேண்டாம்
கர்ப்ப காலத்தில் காரமான, மசாலா அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது ஏனெனில் மலச்சிக்கல், ஜீரணமாகாமல் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் போன்றவற்றிர்க்கு அதுவே காரணமாகிவிடும். எனவே எண்ணெய் குறைவான காரம் இல்லாத உணவாக இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஏற்றதல்ல. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
கால் வீக்கம் கவனிங்க
கர்ப்ப காலத்தில் சிலருக்கு கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்னைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஸ்கேன் செய்வதும் அவசியம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
மலச்சிக்கல் பிரச்சினை
கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது. எனவேதான் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர்
நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது.அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும்.
மேலும் பாதாம் பருப்பு, பீன்ஸ், கீரைகள், பூசணிக்காய், பேரிக்காய், ப்ளாக் பெரிஸ், பயறுவகைகள், வேகவைத்த உருளைக்கிழங்கு, வாழைப்பழம், ஆரஞ்சு, போன்றவைகள் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவற்றை கர்ப்பிணிகள் தவறாமல் தங்கள் உணவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் சரியான அளவு தண்ணீர் பருகவேண்டும். இது மலச்சிக்கலை நீங்கும்.
கால்சிய உணவுகள்
15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. மேலும் தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். அதில் புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.
உப்பு, காரம் வேண்டாம்
கர்ப்ப காலத்தில் காரமான, மசாலா அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது ஏனெனில் மலச்சிக்கல், ஜீரணமாகாமல் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் போன்றவற்றிர்க்கு அதுவே காரணமாகிவிடும். எனவே எண்ணெய் குறைவான காரம் இல்லாத உணவாக இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஏற்றதல்ல. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
கால் வீக்கம் கவனிங்க
கர்ப்ப காலத்தில் சிலருக்கு கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்னைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஸ்கேன் செய்வதும் அவசியம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கர்ப்பிணிகளே, நார்ச்சத்து உணவுகளை நிறைய சாப்பிடுங்க!
» கர்ப்பிணிகளே முட்டை சாப்பிடுங்க....
» உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை சாப்பிடுங்க!!!
» நிறைய காய்கறி சாப்பிடுங்க!
» நிறைய காய்கறி சாப்பிடுங்க!
» கர்ப்பிணிகளே முட்டை சாப்பிடுங்க....
» உடல் ஆரோக்கியத்திற்கு புரோட்டீன் உணவுகளை சாப்பிடுங்க!!!
» நிறைய காய்கறி சாப்பிடுங்க!
» நிறைய காய்கறி சாப்பிடுங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum