தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகு தசை கேது தசை

Go down

ராகு தசை கேது தசை Empty ராகு தசை கேது தசை

Post  amma Fri Jan 11, 2013 6:09 pm


கிரகங்களில் ராகுவை சாயா கிரகம் என்பார்கள். சாயா என்றால் நிழல். ராகு, மற்ற கிரகங்களைப் போல் பிரதட்சிணமாகச் சுற்ற மாட்டார். பின் நோக்கி அப் பிரதட்சிணமாகச் சுற்றுவார். ஒரு ராசியில் ராகு ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருப்பார். சனிக்கு அடுத்தப்படியாக நீண்ட காலம் ஒரு ராசியில் தங்குபவர் ராகுதான்.

ராகுவுக்கு என்று தனி சக்தி இல்லை. இவர் சார்ந்துள்ள கிரகங்களின் அடிப்படையில் இவருக்குச் சக்தி உண்டாகும். என்றாலும் இவருக்கென்று சில தனித் தன்மையும் உண்டு. ஆனாலும் தாமஸகுணம் கொண்டவர். ராகுவின் ஆட்சி வீடு கன்னி. விருச்சிகத்தில் ராகு உச்சம் பெறுவார். ரிஷபத்தில் நீச்சப்படுவார்.

கடகம், சிம்மம் இவற்றைத் தவிர மற்ற கிரகங்கள் ராகுவுக்கு நட்பு வீடுகள். ராகு ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்குச் செல்லும் போது, போகும் இடத்தில் தரக்கூடிய பலன்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தெரிய வரும். ராகு தசை 18 ஆண்டுகள் இருக்கும் கிட்டதட்ட சனி தரும் பலன்களையே இவரும் தருவார்.

ராகுவின் பலன்கள்........

ஒருவர் ராசியில் ராகு வந்து தங்கும் சமயம் பந்த பாசங்களில் மனக்கசப்பு உண்டாகும். தவறான வழிகளில் வந்த பணத்தால் நோய் வந்து செலவை ஏற்படுத்தும். சுபர் பார்த்தால் தீயவை அனைத்தும் மாறி நல்லது நடக்கும். ராசிக்கு 2-இல் ராகு வரும்போதும் இப்படித்தான் இருக்கும். ஆனால், ராசிக்கு 3-இல் ராகு வரும் போது நிலைமைகள் சீரடையும்.

தொடங்கும் காரியம் சிறப்படையும். வசதிகள் பெருகும். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். தீய குணங்கள் விலகி நல்ல குணங்கள் உண்டாகும். ராசிக்கு 4-இல் ராகு வரும்போது குடும்பம் அமைதி இழக்கும். சிலருக்கு இடமாற்றம் இருக்கும். ராசிக்கு 5-இல் வரும்போது இந்த விரும்பத் தகாத சூழ்நிலை நீடிக்கும்.

ஆனால் ராசிக்கு 6-இல் ராகு வரும் சமயம் நிலைமை சீரடையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தீய குணங்கள் விலகி, நல்ல குணமுடையவனாவான். ராகு, ராசிக்கு 7-இல் வரும்போது கெட்டவர்களின் சகவாசத்தால் துன்பங்கள் உண்டாகும். இடம் விட்டு இடம் செல்ல நேரிடும்.

ராசிக்கு 8-இல் வரும் சமயம் எடுத்த காரியங்களில் தடைகள் வந்தாலும் சுபக்கிரகங்கள் பார்த்தால் தடைகள் நீங்கி காரியங்கள் வெற்றி பெறும். ராகு 9-இல் வரும்போது விஷக்கடியால் துன்பம் ஏற்பட்டு சுகமாகும். 10-இல் வரும்போது செலவுகள் அதிகமாகும். குரு பார்த்தால் குறைகள் நீங்கி நிறைந்த பலன் கிடைக்கும். 11-இல் வரும்போது நன்றாக இருக்கும்.

பொருளாதாரம் சீரடையும், உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் 12-இல் நன்றாக இருக்காது. குடும்ப அமைதிய கெடும். மருத்துவச் செலவு ஏற்பட்டு, பொருள் நஷ்டம் உண்டாகும். கஷ்டங்களும், கவலைகளும் இருக்கும். ஆனாலும் சுபவலிமைபெற்ற கிரகங்கள் சேர்க்கையிருந்தால் கஷ்டங்கள் தீரும். நன்மை உண்டாகும்.

ராகுதோஷ பரிகாரம்........

ராகு பகவானுக்கு ஏதாவது ஒரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கறுப்பு வஸ்திரம், கோமேதக மணி, நீலமந்தாரை, இலுப்பைப் பூ ஆகியவற்றால் அலங்காரம் செய்யவும். ராகு ஸ்துதி செய்து அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி, உளுந்து தானியம், உளுத்தம் பருப்புப் பொடி அன்னம் இவற்றால் ஆகுதி பண்ணவும். தீபாராதனை செய்யவும். ராகு கீர்த்தனைகளை ராகப் பிரியா ராகத்தில் பாடி வழிபடுவது சிறப்பு.*
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum