கருடாழ்வார்
Page 1 of 1
கருடாழ்வார்
ஷ்யப மகரிஷிக்கும், வினதைக்கும் பிறந்த குழந்தை கருடன். விஷ்ணுவின் வாகனமான இவருக்கு `பெரியதிருவடி' என்ற சிறப்புப் பெயர் உ ண்டு. கருடனின் தாய் வினதையைக் கத்ரு என்பவள் அடிமையாக்கினாள். அவளை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க, தேவலோகத்திலுள்ள அமுத கலசத்தைக் கொண்டு வர நிபந்தனை விதித்தாள்.
நெருப்புக்குண்டத்தின் நடுவில் அந்தக் கலசம் இருந்தது. அதை தைரியமாக எடுத்து கொண்டு வந்து கொடுத்து அன்னையை விடுவித்தார், கருடன். இவர் பெருமாளின் பக்தர் என்பதால் `கருடாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார்.
பெரிய சிறகுகளை விரித்தும், கைகளைக் குவித்தும் கருவறை முன் காட்சி தருவார். திருமலை திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவத்தில் நடைபெறும் கருடசேவை மிகவும் விசேஷம். ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் இவர் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum