தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா?

Go down

 அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா? Empty அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா?

Post  gandhimathi Wed Jan 23, 2013 1:19 pm

பூஜை அறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால் தான் மறுநாள் காலையில் தீபம் ஏற்ற இயலும். இல்லை எனில் தினம் தினம் காலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும். அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று இருக்கும் போது, நிரந்தர தீபவொளிக்கு இடமில்லாமல் போவதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பக்தியினால் அணையா விளக்கு ஏற்றுகிறேன் என்ற தனிப்பட்டவரின் சிந்தனையை விதியாக மாற்றக்கூடாது. விளக்கைச் சுத்தம் செய்து புதுத் திரி போட்டு விளக்கு ஏற்றுவது சிறப்பு. அணையா விளக்கு வீட்டுக்கு நல்லது என்பது தங்கள் கணிப்பு. எல்லோரது சிந்தனையும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றில்லை. சாஸ்திரத்தை மீறி நமது சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியில்லை.

கோவில்களில் கூட கர்ப்பகிரகத்தின் கதவைத் திறக்க ஒரு மந்திரம், தீபம் ஏற்ற ஒரு மந்திரம், நிர்மால்யத்தை விலக்க ஒரு மந்திரம், அபிஷேகத்துக்கு ஒரு மந்திரம் என்ற நடைமுறை உண்டு. கர்ப்பகிரகத்திலும் அணையா விளக்கு இருந்தால் கோவிலுக்கு நல்லதுதானே என்று சொல்லலாமா? ஸ்வயம்ப்ரகாசனுக்கு விளக்கு எதற்கு? நாம் அவனை தரிசிக்க விளக்கு வேண்டும்.

மேலும் அணையாவிளக்கு எதிர்பாராமல் அணைந்துவிட்டால், வீணாக மனநெருடலைச் சந்திக்க வேண்டி வரும். எதிர்பாராமல் விளக்கு தீபம் பற்றிக் கொண்டு பூஜையையும் பாதிப்புக்குள்ளானால், அதுவும் அபசகுனம். ஆகையால், நமது ஆசையை நிறைவேற்ற எண்ணும்போது, ஆராய்ந்து செயல்பட வேண்டும். சாஸ்திரத்தை கடைப்பிடித்தால் அபசாரம் இருக்காது.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum