தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமாவில் யாரையும் வில்லனாக சித்தரிக்க முடியவில்லை: அஜீத் வேதனை

Go down

சினிமாவில் யாரையும் வில்லனாக சித்தரிக்க முடியவில்லை: அஜீத் வேதனை Empty சினிமாவில் யாரையும் வில்லனாக சித்தரிக்க முடியவில்லை: அஜீத் வேதனை

Post  ishwarya Sat May 04, 2013 6:26 pm


அஜீத்தின் வலை படம் முடியும் தருவாயில் உள்ளது. இதில் ஆபத்தான சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார். விபத்துக்களிலும் சிக்கியுள்ளார்.

அஜீத் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

நான் ஒரு நடிகன். என் வேலையை செய்கிறேன். சண்டைக் காட்சிகளில் நான் மட்டும் 'டூப்' போடாமல் நடிக்கவில்லை. நிறைய பேர் இதுபோல் நடிக்கிறார்கள். அதே வேளை டூப் நடிகர்கள் முக்கிய பங்கு வகிப்பதையும் மறுப்பதற்கு இல்லை.

தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ ஆபத்தான காட்சிகளில் எங்களை நடிக்க வைக்க விரும்புவது இல்லை. அதையும் மீறி சில விபத்துகள் நடக்கின்றன. நான் மரணத்தையே பார்த்து வந்த பின், விபத்து நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாரும் தடுக்க முடியாது.

எனது படங்களில் புது முகங்களுக்கு நான் வாய்ப்பு கொடுப்பதாக பேசுவது சரியல்ல. எல்லாமே கடவுள் கொடுப்பது.

ஹீரோ, வில்லன்கள் வைத்து படம் எடுப்பது இப்போது கஷ்டமாகி விட்டது. வில்லன் எந்த சாதியையோ, மதத்தையோ சார்ந்தவராக இருப்பதுபோல் காட்ட முடியாத நிலை உள்ளது. வக்கீல், டாக்டர் போன்ற கேரக்டர்களிலும் வில்லன்களாக சித்தரிக்க முடியவில்லை. மீறி அது போன்ற கேரக்டர்களை வில்லன்களாக வைத்து படம் எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்க்கிறார்கள். புது புது கட்சிகள் உதயமாவதே இதற்கு காரணம். அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கின்றனர். இதுபோன்ற போராட்டங்களுக்கு ஊடகங்களும் முக்கியத்துவம் அளிக்கின்றன.

தேசத்தில் ஒழுக்கம் குறைந்துவிட்டது. நல்ல தலைவர்கள் வேண்டும் என்கிறோம். அது போல் மக்களுக்கும் நல்ல ஒழுக்கம் வேண்டும்.

ரசிகர்கள் பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்கள் வெளியிடுவது பொறுப்பான செயல் அல்ல. நல்ல விதமாக வளர்க்கப்பட்ட குடிமக்கள் இது போன்ற கருத்துக்களை போடமாட்டார்கள்.

இவ்வாறு அஜீத் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமாவில் ஒற்றுமை இல்லை எஸ்.பி.முத்துராமன் வேதனை
» எனக்கு பயமில்லை… சினிமாவில் தவறு செய்பவர்களை சுட்டிக் காட்டினேன்! – அஜீத்
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» வீரப்பன் கதை….வில்லனாக சித்தரிக்கப்படுவாரா?
» வில்லனாக மாறினார் எம்.எஸ்.பாஸ்கர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum