தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

களஞ்சியம் அவதூறு புகார் மீது அஞ்சலியிடம் விரைவில் விசாரணை

Go down

களஞ்சியம் அவதூறு புகார் மீது அஞ்சலியிடம் விரைவில் விசாரணை Empty களஞ்சியம் அவதூறு புகார் மீது அஞ்சலியிடம் விரைவில் விசாரணை

Post  ishwarya Sat May 04, 2013 4:50 pm

நடிகை அஞ்சலியின் 5 நாள் தலைமறைவு வாழ்க்கை நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. இத்துடன் அவர் காணாமல் போனதாக ஆந்திர போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் கடந்த 8-ந் தேதி அன்று அஞ்சலி அளித்த பேட்டியில் டைரக்டர் களஞ்சியம் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

சித்தியும், களஞ்சியமும் சேர்ந்து தங்களது கட்டுப்பட்டில் என்னை வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள் என்றும், அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க கோரி, டைரக்டர் களஞ்சியம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இதுபற்றி விசாரணை நடத்த அசோக் நகர் போலீசுக்கு உத்தரவிடப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார். அசோக்நகர் 2-வது அவென்யூவில் வசித்து வரும் களஞ்சியத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அவரது வக்கீல் ஜெயபிரகாசும் அப்போது உடன் சென்றிருந்தார். அஞ்சலி என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் துளி அளவும் உண்மை இல்லை. எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விசாரணையின் போது டைரக்டர் களஞ்சியம் அறிவுறுத்தியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக அஞ்சலியிடம் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, டைரக்டர் களஞ்சியம் கொடுத்த புகார் தொடர்பாக அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் களஞ்சியம் மீது குற்றச்சாட்டுகளை கூறினீர்கள் என்பது பற்றியும் அஞ்சலியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

அதே நேரத்தில் அஞ்சலி மீது, சைதாப்பேட்டை கோர்ட்டிலும் டைரக்டர் களஞ்சியம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் மீதான விசாரணை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகுமாறு அஞ்சலிக்கு நோட்டீசு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை அஞ்சலி மீது அவதூறு வழக்கு: டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜர்
» ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை
» நடிகர் மன்சூர் அலிகான் மீது கந்து வட்டிப் புகார் – போலீஸ் விசாரணை
» நடிகை அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் போலீஸ் கமிஷனரிடம் புகார்
» நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum