தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்: சாந்தினி

Go down

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்: சாந்தினி Empty நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்: சாந்தினி

Post  ishwarya Sat May 04, 2013 1:48 pm

பாக்யராஜ் இயக்கிய ‘சித்து பிளஸ்-2’ படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. தற்போது நகுல் ஜோடியாக நடித்த ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.

சாந்தினி அளித்த பேட்டி வருமாறு:-

கல்லூரியில் விஸ்காம் படித்ததால் சினிமாவில் சற்று இடைவெளி ஏற்பட்டது. தற்போது படிப்பு முடிந்து பட்டம் வாங்கி விட்டேன். எனவே இனி முழு நேரமும் நடிப்புதான்.

‘நான் ராஜாவாகப் போகிறேன்’ கமர்ஷியல் படம். அப்படத்தில் நல்ல கேரக்டரில் வந்தேன். தெலுங்கில் படவாய்ப்புகள் வந்தன. ‘காளிச் சரண்’ நல்ல கதை என்பதால் நடிக்க சம்மதித்தேன். இது மாறுபட்ட படமாக இருக்கும். 1980-ல் நடந்த உண்மை கதை படம். நிச்சயம் பேசப்படும்.

நான் விஸ்காம் படித்துள்ளதால் சினிமாவில் கதை, திரைக்கதை, படப்பிடிப்பு கேமரா பற்றியெல்லாம் அறிமுக அறிவு உள்ளது. எதையும் தன்னம்பிக்கையுடன் அணுக படிப்பு உதவுகிறது. எனக்கு கதைதான் முக்கியம். சிறந்த இயக்குனர் படங்களில் நடிப்பேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பேன். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.

இவ்வாறு சாந்தினி கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum