தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.குருவை தலைமறைவு குற்றவாளி என கைது செய்வதா?: சட்டசபையில் பா.ம.க. வெளிநடப்பு

Go down

ஜெ.குருவை தலைமறைவு குற்றவாளி என கைது செய்வதா?: சட்டசபையில் பா.ம.க. வெளிநடப்பு Empty ஜெ.குருவை தலைமறைவு குற்றவாளி என கைது செய்வதா?: சட்டசபையில் பா.ம.க. வெளிநடப்பு

Post  ishwarya Thu May 02, 2013 2:35 pm

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் புதிய அறிவிப்புகள் பற்றி பேச எழுந்தார். அப்போது பா.ம.க. எம்.எல்.ஏ., கலையரசன் (அணைக்கட்டு தொகுதி) எழுந்து ஒரு பிரச்சினை குறித்து பேச முற்பட்டார். ஆனால் சபாநாயகர் அவருக்கு அனுமதி மறுத்தார்.

இதைத் தொடர்ந்து கலையரசன் எம்.எல்.ஏ. சட்ட சபையில் இருந்து வெளி நடப்பு செய்தார். பின்னர் சட்டசபைக்கு வெளியே கலையரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபாநாயகரிடம் ஜெ. குரு எம்.எல்.ஏ. கைது தொடர்பாக ஒரு உரிமை மீறல் பிரச்சினை கொடுத்திருந்தேன். அதை விவாதத்துக்கு எடுக்கும்படி கேட்டேன். ஆனால் அனுமதி மறுத்துவிட்டார். கடந்த 28-8-12 அன்று காஞ்சீபுரம் மாவட்டம் தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தேடியதாகவும், 10-4-2013 முதல் அவர் தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அதனால் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் எங்கும் தலைமறைவாக இருந்ததில்லை. 28-8-2012 முதல் 10-4-2013 வரை உள்ள கால கட்டத்தில் பல்வேறு கூட்டங்களில் அவர் பேசியுள்ளார்.

மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் பெருவிழா கூட்டத்தில் கூட அவர் பேசியுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சட்ட சபையிலேயே குரு பங்கேற்று பேசி இருக்கிறார். அவரை தலைமறைவு குற்றவாளி என போலீசார் இப்போது கைது செய்திருப்பது வியப்பாக உள்ளது. எனவே குரு மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு கலையரசன் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum