தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செயின் பறிக்கும் திருடர்களிடம் பெண்கள் கவனமாக இருக்க...

Go down

செயின் பறிக்கும் திருடர்களிடம் பெண்கள் கவனமாக இருக்க... Empty செயின் பறிக்கும் திருடர்களிடம் பெண்கள் கவனமாக இருக்க...

Post  meenu Tue Jan 22, 2013 12:43 pm

அதிகாலையில் கோலம் போடும் பெண்கள், தனியாக இல்லாமல் அருகில் துணைக்கு ஒருவரை வைத்துக் கொள்வது, குற்றம் செய்ய வருபவர்களை யோசிக்க வைக்கும்.

வாக்கிங், வேலை என்று போகும் பெண்கள், குறுகலான. சந்துகளில் நடக்காமல்... முடிந்தவரை பிரதான சாலைகளில் நடந்து செல்வது திருட்டு நிகழ்வதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

வாக்கிங் செல்லும் பெண்கள், தனியாகச் செல்லாமல் இரண்டு மூன்று பேர் சேர்ந்து செல்வது அனைத்து விதங்களிலும் பாதுகாப்பானதாக இருக்கும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் சாலையில் 'முகவரி கேட்கிறேன்’ என்று அருகில் வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இரண்டு, மூன்று முறை ஒரே பைக் உங்களைக் கடந்து சென்றால் அருகில் இருப்பவர்களிடம் விஷயத்தைச் சொல் 'அலர்ட்’ செய்யலாம். அதிக அளவில் நகைகளை அணிந்துகொண்டு வெளியில் செல்வது திருடர்களுக்குத் தூண்டுதலாக அமையும் என்பதால் அளவாக அணிந்துகொள்வது ஆபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

செயின் அணிகிற பலரும், உடைகளுக்கு மேற்புறமாக எல்லோருக்கும் தெரிகிறமாதிரி அணிந்துகொண்டு போவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தவிர்த்து உள்புறமாக அணிந்துகொள்வது நல்லது.

உறவினர்கள் வீட்டு விஷேசத்துக்காக பேங்க் லாக்கரில் இருந்து எடுக்கும் நகைகளை அந்த நிகழ்ச்சி முடிந்ததும் சிரமம் பார்க்காமல், மீண்டும் பேங்க் லாக்கரில் சேர்த்துவிடலாம். 'அடுத்த மாதம் கோயில் திருவிழா இருக்கு. அதுவரைக்கும் போட்டுக்கலாம்’ என்று அத்தனை நகைகளையும் போய் வரும் இடங்களுக்கு எல்லாம் அள்ளிப்போட்டுச் செல்வது வேண்டாம்.

வீட்டுக்கு அருகில் உள்ள காவல்நிலையத்தின் தொலைபேசி எண்ணைத் தெரிந்து வைத்திருப்பது ஆபத்துச் சமயங்களில் கைகொடுக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum