தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்ணீர் விட்டு அழுதார் சினேகா

Go down

கண்ணீர் விட்டு அழுதார் சினேகா Empty கண்ணீர் விட்டு அழுதார் சினேகா

Post  ishwarya Sat Apr 20, 2013 5:31 pm

தென்மேற்கு பருவக்காற்று படத்தை பார்த்‌துவிட்டு நடிகை சினேகா கண்ணீர் விட்டு அழுதார்.

சமீபகாலமாக தமிழில் மிக அருமையான படங்கள் வரத்துவங்கியுள்ளன. உதாரணமாக சமீபத்தில் வெளிவந்த அங்காடித் தெரு, மைனா உள்ளிட்ட படங்கள். அந்த வரிசையில் தற்போது தென்மேற்குப் பருவக்காற்று படமும் சேர்ந்துள்ளது. மிகவும் உணர்வுபூர்வமாக வெளிவந்துள்ள இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். புதுமுகங்கள் விஜய் சேதுபதி, வசுந்தரா, சரண்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைக்கேல் ராயப்பன் இப்படத்தை வாங்கி தமிழகம் எங்கும் வெளியிட்டுள்ளார். படத்தை பார்த்து பல திரையுலகங்கள் வாழ்த்தியுள்ளனர். குறிப்பாக நடிகை சரண்யாவின் நடிப்பை அனைவரும் வியந்து பாராட்டியுள்ளனர். கிராமத்து கதாபாத்திரத்தில் தாய்மையை போற்றும் வகையில் மிக அற்புதமாக நடித்துள்ளார் சரண்யா.

சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகை சினேகா கண்கலங்கிவிட்டார். இதுகுறித்து சினேகா கூறுகையில், “தென்மேற்கு பருவக்காற்று படத்தை பார்த்து மிகவும் எமோசனல் ஆகிவிட்டன. எமோசனை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். படத்தில் அம்மாவாக நடித்த சரண்யாவின் நடிப்பு மிக அற்புதமாக இருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் இப்படியொரு அம்மா கேரக்டரில் யாரும் நடித்தது இல்லை. அதேபோல் புதுமுகங்கள் விஜய் சேதுபதி, வசுந்தரா ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. நெடுநாள் கழித்து ஒரு அற்புதமான தமிழ் படத்தை பார்த்தேன். படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் மிக அழகாக உருவாக்கியுள்ளார் சீனு ராமசாமி. அவருக்கு எனது வாழ்த்துக்கள். இதுதவிர படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களது பங்களிப்பை மிக அழகாக செய்துள்ளனர். இசை, ஒளிப்பதிவு, பாடல் வரிகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இப்படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தபடத்திற்கு நிச்சயம் விருது காத்திருக்கிறது” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum