தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்னதானம் செய்யுங்கள்

Go down

அன்னதானம் செய்யுங்கள் Empty அன்னதானம் செய்யுங்கள்

Post  gandhimathi Mon Jan 21, 2013 1:48 pm




சித்ரா பவுர்ணமியில் அன்னதானம் செய்து சிவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் கேட்டது கிடைக்கும். கேட்க மறந்ததும் கிடைக்கும். காரணம் சிவன் கருணை வள்ளல், தியாகராஜன், தன்னிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் கையேந்தி தன் அடியார்களை அவன் வெறுங்கையுடன் அனுப்பியது இல்லை.

ஆகவே நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் வறுமை அகலும். நோய்கள் நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். திருமணம் நிறைவேறும். மகப்பேறும் கிடைக்கும். மனக்குழப்பங்கள் ஒழியும். புண்ணியங்கள் சேரும், வீடு பேற்றை அடையவும் முடியும்.

அன்னதான சிவன், அக்னி பகவான், சீனந்தல் சிவப்பெருவாளச் சித்தர் போன்றோர் கிரிவலம் வருகின்ற, மிகவும் கிடைத்தற்கரிய அபூர்வமான சித்ரா பவுர்ணமியில் மாதா அன்னபூரணி தேவியே சிவப்பெருவாளச் சித்தரை ஆசீர்வதித்த கிரிவலப்பாதையில் சூரிய பகவான் உச்ச பலத்துடன் சந்திரனை முழு பார்வையாக பார்க்கும் சித்ரா பவுர்ணமி நாளில் அன்னதானம் செய்வதால் கல்வி, வேலை, பதவி, அரசியல், ஆரோக்கியம், திருமணம், வழக்கு, குடும்ப பிரச்சினை, தொழில் போன்றவற்றில் இருந்த பிரச்சினை நீங்கி மேன்மையும், சுபமும் உண்டாகும் மற்றும் ஓட்டல், மளிகை, காய்கறி போன்றவை சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளோர் வளம் பெறுவதற்கும், வயிறு சம்பந்தமான நோய்களால் வாடுவோர் தக்க நிவர்த்தி பெறுவதற்கும், அன்னது வேஷத்தால் சரியாக சாப்பிட முடியாதவர்களுக்கு பலன் கிடைக்கவும் இந்த சித்ரா பவுர்ணமியில் அன்னதானம் செய்வது மிகவும் உகந்தது.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum