தானம் பெற்ற கிருஷ்ணன்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
தானம் பெற்ற கிருஷ்ணன்
அந்தணராக வேடமணிந்து வந்த கிருஷ்ணன் கர்ணன் செய்த தர்மங்களை அவனிடம் இருந்து தானமாக பெற்றார். அதற்காக, அவனுக்கு மோட்சம் அளித்தார். சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு, அவன் செய்த பொன், நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.
ஆனால், அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்தபோது, தேவர்கள் அவனிடம், "கர்ணா... நீ பூமியில் இருந்தபோது பொன்னும், மணியுமே தானம் செய்தாய், அன்னதானம் செய்யவில்லை. எனவே நீ இப்போது பூமிக்குச் செல். இப்போது மகாளயபட்ச காலம்.
பிதுர்கள் பூமிக்குச் செல்லும் காலம். அவர்களை அவரவர் உறவினர் வரவேற்று. தர்ப்பணம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானமும் செய்வர். இக்காலத்தில், நீ மறைந்திருந்து அன்னதானம் செய்து வந்தால் பின்பு இங்கு உணவும் கிடைக்கும்!' என்றனர். இதனையேற்று கர்ணன் பூமிக்கு வந்த காலமே மகாளய காலம் ஆனது. உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான்.
அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்யவேண்டும். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்.*
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்
» தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
» தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்
» தேசிய விருது பெற்ற கையோடு அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தமிழ் கலைஞர்கள்!
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum