பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
வராக புராணத்தில் இதற்கொரு கதை சொல்லப்பட்டுள்ளது. ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதாகவும் எண்ணிக் குழப் பம் அடைந்தனர். இதற்குத் தீர்வு காண பரமேஸ்வர னிடம் சென்று முறையிட்டனர்.
பரமன் தனது தர்ம பத்தினி யாம் பார்வதி தேவியை ஞானக் கண் ணால் உற்று நோக்கி னார். அந்த சமயத் தில் அதிசயிக் கும் வகை யில், மோகன வடிவத்தில், எல்லோரை யும் கவர்ந் திழுக் கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான்.
மற்றவர்களது கண்கள் படாமல் இருக்கப் பார்வதி தேவியானவர் பிறரை மயங்கச் செய்யும் இந்த அழகான வடிவத்தை விடுத்துப்பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி உருவத்தை மாற்றினாள். பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கெல்லாம் தலைவனாக நியமனம் செய்தார்.
இனிமேல் எந்தக் காரியங்கள் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத் தடைகள் ஏற்படும் என்றும் அறிவித்து விட்டார். அன்றைய நாள் முதல் இந்நாள் வரை பிள்ளையாரை முதலில் வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது.
மேலும் வழிபாடு
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?
» பிள்ளையாரை தூக்கி பிரார்த்தனை
» நந்திதேவருக்கே முதல் வழிபாடு
» நந்திதேவருக்கு முதல் வழிபாடு ஏன்?
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» பிள்ளையாரை தூக்கி பிரார்த்தனை
» நந்திதேவருக்கே முதல் வழிபாடு
» நந்திதேவருக்கு முதல் வழிபாடு ஏன்?
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum