தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் இனி நிறைய படங்களில் நடிப்பேன்: சமந்தா!

Go down

தமிழில் இனி நிறைய படங்களில் நடிப்பேன்: சமந்தா! Empty தமிழில் இனி நிறைய படங்களில் நடிப்பேன்: சமந்தா!

Post  ishwarya Fri Apr 05, 2013 2:43 pm

இனி நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
தமிழில் பாணா காத்தாடி, மாஸ்‌கோவின் காவிரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர்
நடிகை சமந்தா. அதன்பிறகு தெலுங்கு பக்கம் போனவருக்கு, தெலுங்கு
விண்ணைத்தாண்டி வருவாயா ஒரு நல்ல அங்கீகாரத்தை ‌கொடுத்தது. தொடர்ந்து
தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வந்த சமந்தாவை மீண்டும் தமிழுக்கு அழைத்து
வந்து இருக்கிறார் கவுதம். அவர் இயக்கும் நீ தானே என் பொன்வசந்தம்
படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக்கி இருக்கிறார். இந்தபடத்தில் நடித்து கொண்டு
இருக்கும் போதே, மணிரத்னத்தின் கடல் படத்திலும் நடிக்க
ஒப்பந்தமாகிவிட்டார்.
மணிரத்னம் படத்தில் நடிக்க சிறப்பு பயிற்சி எதுவும் மணி சார்
கொடுத்தாரா…? என்று சமந்தாவிடம் கேட்டால், அதிகம் பேசவே மாட்டார். சில
படங்களை பார்க்க சொன்னார். ராமேஸ்வரத்தில் சூட்டிங் எடுப்பதாக பிளான்.
மற்றபடி எதுவும் இல்லை என்று கூறினார். சரி அப்படின்னா இனி நிறைய தமிழ்
படங்களில் நடிப்பீர்களா என்றால், நான் சென்னை பொண்ணுதான், என் அம்மா
சென்னையிலும், நான் ஐதராபாத்திலும் இருக்கிறேன். தெலுங்கு படம் நிறைய
வந்ததால் அங்கு கவனம் செலுத்த வேண்டியாகிவிட்டது. இனி நிறைய தமிழ்
படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் சமத்து பொண்ணான சமந்தா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum