தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருக்கோயிலை வணங்கும் முறை

Go down

திருக்கோயிலை வணங்கும் முறை Empty திருக்கோயிலை வணங்கும் முறை

Post  gandhimathi Sat Jan 19, 2013 6:10 pm

1.பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றுக்கு அருகே மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும். பிற இடங்களில் விழுந்து வணங்குதல் கூடாது.

2.கிழக்கு நோக்கிய கோவிலில் வடக்கு முகமாக விழுந்து வணங்க வேண்டும். மேற்கு நோக்கிய கோவிலில் வடக்கு முகமாக விழுந்து வணங்க வேண்டும்.

3.திருக்கோவில் மூடி இருக்கும் போதும், திருவிழாவில் சுவாமி உலா வரும்போதும், அபிஷேகம் நடைபெறும் காலத்திலும், சுவாமிக்குத் திரையிட்டு இருக்கும் போதும், பிரகாரத்தை வலம் வருதல் கூடாது.

4.தன்னைத்தானே ஒருபோதும் சுற்றக்கூடாது.

5.எக்காரணத்தை முன்னிட்டும் விக்கிரகங்களைத் தொட்டு வணங்குதல் கூடாது.

6.விபூதியை நெற்றியில் பூசும்பொழுது விபூதி தரையில் சிந்த நேரிடும். அவ்வாறு சிந்துதல் கூடாது. மூன்று விரல்களினால் திருநீற்றை பூசுவது நன்மை தரும்.

7.ஆலயத்தின் உள்ளே எந்த சன்னதிகளிலும் விழுந்து வணங்கக்கூடாது.

8.மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவருக்கும் அவருக்கு எதிரில் இருக்கும் நந்தி, மயில், சிங்கம் போன்றவைகளுக்கு இடையே செல்லுதலோ வணங்குதலோ கூடாது.

9.புண்ணிய தீர்த்தங்களில் முதலில் காலை வைத்தல் கூடாது. நீரை கையால் அள்ளித் தலையில் தெளித்துக் கொண்டு பின்னர் பாதத்தை நனைக்க வேண்டும்.

10 கோயிலின் உள்ளே வீண்வார்த்தைகள் பேசாது, இறை நினைவோடு உள்ளத்தில் இறைவனை நினைத்து ஒரே மனதாக வணங்க வேண்டும்.

உடலும்-கோபுரமும்
பாதங்கள்- முன்கோபுரம்
முழங்கால்- ஆஸ்தான மண்டபம்
தொடை- நிருத்த மண்டபம்
தொப்புள்- பலிபீடம்
மார்பு- மகாமண்டபம் (நடராசர்)
கழுத்து- அர்த்தமண்டபம் (நந்தி)
தலை (சிரசு)- கர்ப்ப கிரஹம்
வலச்செல்வி- தட்சிணாமூர்த்தி
இடச்செல்வி- சண்டிகேசுவரர்
வாய் -ஸ்நபநமண்டபவாசல்
மூக்கு -ஸ்நபந மண்டபம்
புருவமத்தி -லிங்கம்
தலைஉச்சி -விமானம்
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum