தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அன்னையை வழிபடும் முறைகள்

Go down

அன்னையை வழிபடும் முறைகள் Empty அன்னையை வழிபடும் முறைகள்

Post  gandhimathi Sat Jan 19, 2013 6:05 pm

துர்க்காவை பல்வேறு பெயர்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அன்னையைப் போற்றும் அனைவருக்கும் நல்லருள் தந்து வெற்றிகளைக் கொடுப்பதினால் "ஜெய துர்க்கை'' என்று போற்றுகின்றனர். பதினெட்டு கரங்களுடன் பக்தர்களைப் பரவசப்படுத்துவதினால், "அஷ்டாதசபுஜ துர்க்கை'' என்று போற்றி வணங்குகின்றனர்.

அன்னையை ராகு காலத்தில் வழிபடுவதினால் "இராகு கால துர்க்கை'' என துதிக்கின்றனர். சினம் கொண்டு சிவந்த கண்களுடன், சிவந்த மேனியுடன் திகழ்வதினால் "கெம்பம்மா துர்க்கை'' என்று வழிபடுகின்றனர். வீராவேசம் கொண்டு அரக்கர்களை அழித்து தேவர்களுக்கு அரணாக இருந்தமையால் கொற்றவை என்றும் துதிக்கின்றனர்.

வலக்கையில் மழுவுடன் காட்சியளிக்கும் துர்க்கையை "சிவ துர்க்கை'' என்று வணங்குகின்றனர். இடக்கையில் சங்கும், வலக்கையில் சக்கரமும் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் துர்க்காதேவியை "விஷ்ணு துர்க்கை'' என வழிபடுகின்றனர். அன்னையை பலநாமங்களில் அழைத்து மனம் உருகி வணங்கி வழிபட்டாலும் பக்தர்களுக்கு துர்க்கா அம்மன் பேரருளை வழங்கி வாழ்வளிக்கின்றனர்.

அன்னை துர்க்கைக்கு உரிய திதி எட்டாம் நாளான அஷ்டமி திதியாகும். அதனையே பக்தர்கள் `ஸ்ரீதுர்க்காஷ்டமி' என்று கூறி சிறப்பாக வழிப்படுகின்றனர்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum