தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணத்தடை நீக்கும் திருத்தலங்கள்

Go down

திருமணத்தடை நீக்கும் திருத்தலங்கள் Empty திருமணத்தடை நீக்கும் திருத்தலங்கள்

Post  birundha Sat Mar 30, 2013 10:07 pm

1.தென்னாங்கூர்:- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் உள்ள தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மணி கோயிலில் உள்ள ஸ்தல மரமான தமால மரத்தை மனச் சுத்தியுடன் பிரார்த்தனை செய்து கொண்டு 12 முறை வலம் வந்து வணங்கினால் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும்.

2.திருவக்கரை:- பாண்டிச்சேரி- மயிலம் பாதையில் உள்ள திருவக்கரை சந்திரசேகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்ர காளியின் கருவறையின் உள் சுற்றில் இருக்கின்ற கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூசி பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

3.திரு ஆதனூர்:- தஞ்சை மாவட்டம் சுவாமி மலைக்கு அருகில் உள்ள திரு ஆதனூர். திவ்ய தேசத்தில் உறையும் ஆண்டவன் அபயப் பெருமாளுக்கும். பார்க்கவி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தி வழிபடுவர்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நல்ல முறையில் நடைபெறும்.

4.கூத்தனூர்:- கும்பகோணம்-காரைக்கால் சாலையில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணன் ஆலயத்தில் உள்ள பிரம்மச்சாரியான அனுமனுக்கு திருமணத்தடை உள்ள ஆண்கள் வெறும் வெற்றிலை மாலை சாத்தாமல் வெற்றிலைக்குள் சீவலை வைத்து கட்டிய மாலையை அணிவித்து பூஜை செய்தால் திருமணத்தடை நீங்குவது உறுதி.

5.ஸ்ரீவாஞ்சியம்:- நன்னிலம்-குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி, நாகநாதசுவாமியையும், நாகராஜரையும் பிராத்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

6. சென்னை தம்பு செட்டி தெரு:- இங்குள்ள காளிகாம்பாள் கோயில் உள்ள சிறப்பு தெய்வமான நாகேந்தரருக்கு மஞ்சள் கயிறு சுற்றி வேண்டினால் விரைவில் திருமணம் நடந்தேறும்.

7.ரிஷிவந்தியம்:- விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்திலுள்ள அர்த்த நாரீசுவரர் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று திருமணமாகாத ஆண், பெண் இரு பாலருக்கும் திருமணத்தோஷப் பரிகாரம், சிறப்பு அர்ச்சனைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இவர்களுக்கு விரைவில் திருமணம் அமைகின்றன.

8.சிங்கப்பெருமாள் கோயில்:- செங்கல்பட்டிலிருந்து 10 கீ.மி. தொலைவில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் உறையும் ஸ்ரீ பாடலாத்திரி நரசிங்க சுவாமியை வலம்(கிரிவலம்) வந்து வணங்கி, இறைவனின் மூன்றாவது கண்ணை ( திருநேந்திரத்தை) தரிசனம் செய்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum