தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேராச்சி அம்மன் கோவில்

Go down

பேராச்சி அம்மன் கோவில் Empty பேராச்சி அம்மன் கோவில்

Post  birundha Fri Mar 29, 2013 6:00 pm

ஸ்தல வரலாறு.....

பாளை வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரமாண்டமாக எழும்பி உள்ள கோவில் போராச்சி அம்மன் கோவில். இந்த கோவிலின் இயற்பெயர் குட்டத்துறை பேராத்து செல்வி அம்மன் கோவில் என்பதாகும். இந்த கோவிலில் சித்திரை கொடை விழா விசேஷமாக நடக்கும். அப்போது நள்ளிரவில் தீ சட்டி எடுத்து ஆற்று கசத்தில் விடுவார்கள்.

மேலும் கார்த்திகை மாதத்தில் அய்யப்ப பக்தர்கள் பூக்குழி விழா நடத்துவார்கள். தை, மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இந்த கோவிலில் வணங்கி தாமிரபரணி ஆற்றில் குளித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். இந்த கோவிலின் அபார சக்தி குறித்து ஒரு உண்மை சம்பவம் சொல்லப்படுகிறது.

இந்த கோவிலில் இடம்பெற்றுள்ள தாமிரபரணி ஆற்றின் மறுகரையில் எட்டயபுரம் மகாராஜாவின் சமஸ்தான பங்களா உள்ளது. இங்கு திருவாங்கூர் மகாராஜா விருந்தினராக வந்து ஓய்வெடுத்துள்ளார். அப்போது கொடை நாளில் இரவு பூஜைக்காக கோவிலில் மேளதாளம் அடிக்கப்பட்டது. இந்த சத்தம் காரணமாக திருவாங்கூர் மகாராஜாவால் தூங்க முடியவில்லையாம்.

இதனால் அவர் தன் சகாக்களை அனுப்பி மேளதாளம் அடிப்பதை நிறுத்த சொல்லி உள்ளார். பின்னர் மறுநாள் திருவாங்கூர் மகாராஜா புறப்பட்டு தன் நாட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவரது உடலில் குஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் மனம் நொந்து இறைவனை பிரார்த்தித்த போது கனவில் குழந்தை உருவில் அம்மன் தோன்றி தாமிரபரணி நதிக்கரையில் நீ என்னை அவமதித்து விட்டாய், அதற்காக மனம் வருந்தி பேராத்து செல்வி அம்மனை வணங்கி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி எழுந்தால் குஷ்டம் தீரும் என்று உரைக்கப்பட்டதாம்.

உடனடியாக திருவாங்கூர் மகாராஜா பாளை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் வந்து தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கினாராம். பின்னர் அவர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி குளித்து எழ அவர் மீதுள்ள குஷ்டம் மாயமாய் மறைந்ததாம். அது முதல் கோவிலுக்கு அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுப்பகுதி குஷ்டம் போக்கும் துறை என்பதை குறிக்கும் குட்டத்துறை என்று மருவி அழைக்கப்பட்டதாம்.

அந்த பெயரே கோவிலின் பெயரோடும் சேர்ந்து குட்டத்துறை பேராத்து செல்வி அம்மன் கோவில் என்று அழைக்கப்பட்டு தற்போது பேராச்சி அம்மன் கோவில் என்று பலராலும் அழைக்கப்பட்டு போற்றப்பட்டு வருகிறது. இங்கிருந்து மண் எடுத்து பல்வேறு இடங்களிலும் பேராத்து செல்வி அம்மன் கோவிலை நிறுவி உள்ளதாகவும் வரலாறு கூறுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum