தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுஷ்காவுக்கு திடீர் வாந்தி மயக்கம்! ஆந்திராவில் பரபரப்பு

Go down

அனுஷ்காவுக்கு திடீர் வாந்தி மயக்கம்! ஆந்திராவில் பரபரப்பு Empty அனுஷ்காவுக்கு திடீர் வாந்தி மயக்கம்! ஆந்திராவில் பரபரப்பு

Post  ishwarya Fri Mar 29, 2013 12:48 pm

பொதுவாகவே நடிகர்-நடிகைகள் இரவு பகல் பாராமல் படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் உடல்ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டு சிலர் வாந்தி எடுப்பதுண்டு. இதனால் அவ்வப்போது அது எந்த மாதிரியான வாந்தியாக இருக்கும் என்ற விவாதங்களும் நடப்பதுண்டு. அப்படி அனுஷ்கா இரண்டாம உலகம் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா காட்டுப்பகுதியில் முகாமிட்டிருந்தபோது இரண்டு தடவை வாந்தி எடுத்திருக்கிறாராம். அது புதிய இடம் புதிய சீதோஷ்ணம் என்பதனால் ஏற்பட்ட வாந்தியாம். அதனால் காட்டுப்பகுதிக்கே மருத்துவர்களை கூட்டிச்சென்று அவருக்கு சிகிச்சை அளித்தார் செல்வராகவன்.

ஆனால் இப்போது அதுவல்ல பிரச்சினை. ராணி ருத்ரம்மா தேவி படத்தில் நடிப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டிருக்கிறார் அனுஷ்கா. தினமும் நன்றாக ஓய்வு எடுத்து விட்டு, மதியத்துக்கு பிறகுதான் வாள் சண்டை, கத்திச்சண்டை பயிற்சிகளில் ஈடுபடுகிறாராம். ஆனால் அப்படி பயிற்சி எடுக்கும்போது, குனிந்து நிமிர்ந்து டைவடித்து வாளை சுழற்றி சுழற்றி சண்டை போவடுவதால், அடிக்கடி குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுக்கும் அனுஷ்கா மயங்கி சாய்ந்து விடுகிறாராம். இந்த செய்தி வெளியே கசிந்ததால் அனுஷ்காவுக்கு வாந்தி மயக்கம் என்றதும் ஆந்திரா படவுலகத்துக்கே தலைசுற்றி போனதாம். ஆனால அதன்பிறகு பயிற்சியினால் ஏற்பட்ட வாந்திதான் என்று செய்தி வெளியிட்டு புகைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்களாம்.

இதனால் பல நாட்களில் பயிற்சி தடைபட்டுள்ளதாம். மேலும், பெரிய அளவில் உடம்பை வருத்தி செயல்படுவதால்தான் இந்த மாதிரியான மயக்கம் வருகிறது என்று மருத்துவர் சொன்ன அட்வைஸ் காரணமாக இப்போது கடினமான பயிற்சிகளை தவிர்த்து எளிமையான பயிற்சிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறாராம் அனுஷ்கா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum