தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகாரியை மாற்றக்கோரி நெல்லை எஸ்.பி.அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Go down

அதிகாரியை மாற்றக்கோரி நெல்லை எஸ்.பி.அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை Empty அதிகாரியை மாற்றக்கோரி நெல்லை எஸ்.பி.அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Post  meenu Thu Mar 28, 2013 2:06 pm


பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூரில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் 2 கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இருப்பினும் தொடர்ந்து இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பாவூர்சத்திரம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் செயல்பட்டு வருவதாக ஒரு தரப்பினர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து அவர்கள் இன்று 2 வேன்களில் நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்.பி.யை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எஸ்.ஐ. துரைசிங்கத்தை மாற்ற வேண்டும், மோதல் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் கோரிக்கையை நிறைவேற்றும்வரை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum