தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாளையில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள்-ஊழியர்கள் உண்ணாவிரதம்

Go down

பாளையில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள்-ஊழியர்கள் உண்ணாவிரதம் Empty பாளையில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள்-ஊழியர்கள் உண்ணாவிரதம்

Post  meenu Thu Mar 28, 2013 2:00 pm

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சம்பள குறைப்பு, சலுகை குறைப்பு, ஆட்கள் குறைப்பு செய்யக்கூடாது , அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தராக உயர்கல்வி துறை அமைச்சரை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பாளை மார்க்கெட் திடலில் இன்று உண்ணாவிரதம் நடந்தது.

இதற்கு உதவி பேராசிரியர் நாகராஜன் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். நெல்லை கல்வி மைய தனி அதிகாரி உலகநாதன் வரவேற்று பேசினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அலுவலர் சங்க தலைவர் மாணிக்கவாசகம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் முருகேசன், முதுநிலை பட்டதாரிஆசிரியர் கழகம் மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இன்று மாலை உண்ணாவிரதத்தை எல்.ஐ.சி. ஊழியர் சங்க பொதுச்செயலாளர் முத்துகுமாரசாமி முடித்து வைக்கிறார். உண்ணாவிரதத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum