தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரகண்டநல்லூரில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண டி.ஐ.ஜி.யிடம் மனு

Go down

அரகண்டநல்லூரில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண டி.ஐ.ஜி.யிடம் மனு Empty அரகண்டநல்லூரில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண டி.ஐ.ஜி.யிடம் மனு

Post  meenu Thu Mar 28, 2013 1:44 pm

அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்திற்க்கு விழுப்புரம் சரக டி.ஜ.ஜி முருகன் திடீர் தணிக்கை செய்ய வந்தார். அப்போது அவரை திருக்கோவிலூர் துனைபோலீஸ் சூப்பிரண்டு நரசிம்மவர்மன், திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட டி.ஜ.ஜி.முருகன் காவல் நிலையத்தில் ஆய்வு பணிகள் மேற்கொண்டார். சுமார் 1 1/2 மணிநேரம் அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்த முருகன் முடிவில் போலீசாரை பாராட்டினார்.

அதே சமயம் காவல் நிலையத்திற்க்கு வருபவர்களிடம் அன்பாக பழகி பிரச்சினைகளை தீர்க்க பாடுபடவேண்டும். அதேசமயம் குற்றவாளிகளிடம் சட்டத்திற்க்கு உட்பட்டு கடுமையாக நடக்கவேண்டும்.

அப்போதுதான் நிரபராதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் வேறுபாடு தெரியும். முடிந்த அளவு வழக்குகளை தேக்கம் ஆகச்செய்யாமல் விரைந்து முடித்தாலே குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைத்துவிடும். திருட்டு வழக்கில் கண்டிப்பாக குற்றவாளிகளை பிடிப்பதுடன் பொருட்களையும் மீட்கவேண்டும்.

அதனை உரிய காலத்தில் இழந்தவர்களுக்கு கிடைக்கும் வகையில் செயல்படவேண்டும். அதேபோல் ஆவணங்களை முறையாக பயன்படுத்தவேண்டும். மேற்கண்ட அறிவுரைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகனையும், அறிவுரைகளையும் டி.ஐ.ஜி முருகன் போலீசாருக்கு வழங்கினார்.

அப்போது அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்திற்க்கு வந்த பேரூராட்சி தலைவர் வாசிம்ராஜா டி.ஐ.ஜி முருகனை சந்தித்து பேசினார். அப்போது அரகண்டநல்லூர் போலீசாரின் செயல்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்த பேருராட்சி தலைவர் வாசிம்ராஜா மார்க்கெட் கமிட்டி பகுதியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினசரி ஏற்படும் போக்குவரத்து ஸ்தம்பிப்பை போக்க தனியாக ஒரு போலீஸ் குழுவை நியமிக்கவேண்டும்.

அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். மேலும் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்திற்க்கும் கூடுதல் போலீசாரை நியமித்தால் நன்றாக இருக்கும் எனவும் கேட்டுக்கொண்டார். கோரிக்கையை பரிசீலிப்பதாக டி.ஐ.ஜி.முருகன் கூறினார். அதனை தொடர்ந்தும் டி.ஐ.ஜி முருகன் போலீஸ் நிலையத்தை சுற்றிப்பார்த்து ஆய்வு செய்தார்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum