தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்

Go down

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் Empty மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்

Post  birundha Wed Mar 27, 2013 11:14 pm

ஸ்தல வரலாறு....

வத்தலக்குண்டு- தேனி சாலையில் உள்ள வேதானப்பட்டியில் இருந்து வடக்குப்புறம் நோக்கி சுமார் 3 கிலோமீட்டர் பயணம் செய்தால் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலை சென்றமையலாம். கோவில் என்றாலே நமக்கு சிலைகள் தான்நினைவில் நிற்கும்.

ஆனால் இந்ந கோவிலில் சிலைகள் எதுவும் இல்லை. உற்சவ விக்ரகமும் கிடையாது. கோவிலுக்கு முன்பு உள்ள கதவுகளுக்கு தான் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதே போல் நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது. அன்ன நைவேத்தியம் கிடையாது.

உடைக்காத தேங்காய். உரிக்காத வாழைப்பழம் அகியவை படைக்கப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத அதிசயமாக இது உள்ளது.மூங்கிலனை காமாட்சி அம்மனை தென் மாவட்டங்களை சேர்ந்த பலர் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம், தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு, நோய் குணமாகுதல், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தல், வருமானம் உயருதல் போன்றவை அம்மனின் அருளால் நடைபெறுகின்றன.

அம்மனுக்கு அபிஷேகம் செய்து நெய்யூற்றி மனமுருகி வேண்டி சென்றால் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம் ஆகும். குறிப்பாக குழந்தை பேறு இல்லாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள் கோவிலுக்கு அதிகம் பேர் வருகிறார்கள்.

குழந்தை இல்லாதவர்கள் தங்களது புடவை முந்தானையை கிழித்து கோவில் வளாகத்தில் உள்ள வில்வமரக்கிளையில் தொட்டில் கட்டி செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum