தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவான்மியூர் மருந்தீசர் தலம்

Go down

திருவான்மியூர் மருந்தீசர் தலம் Empty திருவான்மியூர் மருந்தீசர் தலம்

Post  birundha Wed Mar 27, 2013 4:05 pm

கைலாயத்தில் சிவன் பார்வதியை மணம் புரிந்து கொண்ட காட்சியைக் காண, சகல உலகங்களிலிருந்தும் அடியார்கள் வந்ததால், நிலத்தின் வட பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது.

நிலத்தை சமநிலைப்படுத்த அகத்தியரைச் சிவபெருமான் தென் திசை நோக்கி அனுப்பினார். அகத்தியர் விரும்பிய போதெல்லாம் தம்பதி சமேதராகக் காட்சி அளிப்பதாகச் சிவன் வாக்களித்தார். இவ்வாறு பல தலங்களில் இறைவனின் மணக்கோலம் கண்ட அகத்தியர் திருவான்மியூரிலுள்ள வன்னி மரத்தடியில் ஈசனின் மணக்கோலம் கண்டுகளித்தார்.

பூமியில் உயிர்களுக்கு ஏற்படும் நோய்களின் வகைகள், அவற்றின் தன்மை, அவற்றைப் போக்கும் மூலிகைகளின் வகைகள் அவற்றை உபயோகிக்கும் முறை ஆகிய தகவல்களைச் சிவபெருமான் அகத்தியருக்கு இத்தலத்தில் விரிவாக உபதேசித்தார். மனிதர்கள் செய்யும் வினைக்கேற்ப, அவர்களது உடல்நலம் அமையும்.

உயிர்களுக்கு ஏற்படும் நோய் வகைகள் 4448 ஆகும். இவ்வாறு மருத்துவம் பற்றிய விரிவான உபதேசங்களை அளித்ததால் இத்தல இறைவன் மருந்தீசர் என்றும், ஒளஷதீசர் என்றும் அழைக்கப்படுகிறார். மருத்துவர்களால் தீர்க்க இயலாத நோய்களை நிவர்த்தி செய்யும் அற்புதமான தலமாக திருவான்மியூர் மருந்தீசர் தலம் திகழ்கிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum