தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தேர்தல் சுதந்திரமாக நடைபெற மக்களின் பங்களிப்பு அவசியம் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் பேச்சு

Go down

தேர்தல் சுதந்திரமாக நடைபெற மக்களின் பங்களிப்பு அவசியம் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் பேச்சு  Empty தேர்தல் சுதந்திரமாக நடைபெற மக்களின் பங்களிப்பு அவசியம் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் பேச்சு

Post  meenu Tue Mar 26, 2013 5:02 pm

தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற பொது மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பு அவசியம் என்று தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் கூறினார்.ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக ஒரு தன்னார்வ அமைப்பு நேற்று கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இதில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:–

பண பலத்தை தடுக்க

தேர்தலின்போது வேட்பாளர்கள் பண பலத்தையும், ஆள் பலத்தையும் முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பண பலம் மற்றும் ஆள் பலம் எந்த தொகுதிகளில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக அதிக அளவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனவோ அந்த தொகுதிகள் அடையாளம் கண்டறியப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.இந்த இரு முறைகேடுகளையும் கண்காணிக்கவும், தடுக்கவும் தேர்தல் கமிஷன் சிறப்பு படைகளை அமைக்கிறது. ஆனாலும், அந்த தொகுதிகளில் நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைபெறவும், தேர்தல் சீர் திருத்தங்கள் சரியாக, உறுதியாக நடைமுறைப்படுத்தவும் பொது மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் அவசியம் ஆகும்.

கவலை

தேர்தலில் பணம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கை எடுத்தாலும், பணம் கொடுத்து செய்திகள் பிரசுரம் ஆவது கவலை அளிக்கிறது. அப்படிப்பட்ட வழக்குகள், சம்பவங்கள் பத்திரிகை கவுன்சிலின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.சமூக ஆர்வலர்கள் அருணா ராய், நிகில் தேய் ஆகியோர் உள்பட மேலும் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் சுதந்திரமாக
» இயற்கை பாதுகாப்பில் எலி இனங்களின் முக்கிய பங்களிப்பு
» தமிழக தேர்தல் களம் தேர்தல் கண்ணோட்டம்; தமிழக பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள்
» இலவச பொருட்களை வழங்க மாணவர்களிடம் பணம் வசூல் செய்த தலைமை ஆசிரியர் திங்கள்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். சிதம்பரம் வட்டம் புதுசத்திரம் அருகே சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன். இவர் மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்க ரூ.10
» நடிகரின் மேடையில் நாஞ்சில் சம்பத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum