தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்வதேச ஆவண குறும்பட விழா: நாளை தொடக்கம்

Go down

சர்வதேச ஆவண குறும்பட விழா:  நாளை தொடக்கம் Empty சர்வதேச ஆவண குறும்பட விழா: நாளை தொடக்கம்

Post  ishwarya Sat Mar 23, 2013 2:04 pm

புதுச்சேரி பல்கலைக் கழகம், மத்திய திரைப்பட பிரிவு-மும்பை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து நடத்தும் சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழா, புதுச்சேரியில் டிசம்பர் 20-ம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது.
÷இது குறித்து விழா ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது:
÷இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்து மிகப் பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கிறது. இந் நிலையில் வரலாறுகளையும், அதன் உண்மைகளையும் பதிவு செய்யும் ஆவணப்படங்கள், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் வீச்சால் மிகக் குறைவான நேரத்தில், குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் குறும்படங்கள் இந்திய சினிமா வரலாற்றிலும், உலக சினிமா வரலாற்றிலும் அழுத்தமான தடயங்களை பதித்திருக்கிறது.
÷அந்த அடிப்படையிலேயே வரும் டிசம்பர் 20-ம் தேதி முதல் டிசம்பர் 24-ம் தேதி வரை புதுவைப் பல்கலைக் கழக ஜவஹர்லால் நேரு அரங்கில் சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.
12 நாடுகளைச் சேர்ந்த 42 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
÷பல்கலைக்கழக மாணவர்களும், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் 500-க்கும் மேற்பட்ட சினிமா ரசிகர்களும் பங்கேற்கும் வகையில் தினசரி காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக படங்கள் திரையிடப்படும்.
÷இதன் நிறைவு விழாவில் திரைக்கலைஞர் ரோகினி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நிறைவு விழாவில் ரோகினி உருவாக்கத்தில் உருவான சைலண்ட் ஹியூட் (மெளன ஓலம்) திரைப்படம் திரையிடப்படுகிறது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum