தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

"வன யுத்தம்' திரைப்படம் வெளியாகுமா? முத்துலட்சுமி மனு மீது இன்று விசாரணை

Go down

"வன யுத்தம்' திரைப்படம் வெளியாகுமா? முத்துலட்சுமி மனு மீது இன்று விசாரணை Empty "வன யுத்தம்' திரைப்படம் வெளியாகுமா? முத்துலட்சுமி மனு மீது இன்று விசாரணை

Post  ishwarya Fri Mar 22, 2013 5:05 pm



"வன யுத்தம்' திரைப்படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் வியாழக்கிழமை இத்திரைப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ""நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை காத்திருங்கள்'' என்று படத்தின் இயக்குநருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

முத்துலட்சுமியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சஞ்சய் ஹெக்டேவின் முறையீட்டை அடுத்து, ""படத்தில் காணப்படும் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் தொடர்பாக மனுதாரர் முத்துலட்சுமியும் பட இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன் விவரத்தை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் டி.எஸ். தாகுர், சுதான்சு ஜோதி முகோபாத்யாய அடங்கிய அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, படத்தின் இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.கே. மணி, ""வன யுத்தம் படத்தை உயர் நீதிமன்ற உத்தரவின்படி முத்துலட்சுமிக்கு திரையிட்டுக் காண்பித்தோம். நீதிமன்ற அனுமதியுடன் பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படம் வெளியிடப்படும்'' என்று கூறினார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முத்துலட்சுமியின் வழக்குரைஞர் சஞ்சய் ஹெக்டே, ""வன யுத்தம் படத்தில் 32 காட்சிகளுக்கு முத்துலட்சுமி ஆட்சேபம் தெரிவித்தார். அதில் இரண்டு காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் படம் வெளியானால், முத்துலட்சுமியின் இரண்டு மகள்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், முத்துலட்சுமியின் சுதந்திரத்துக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகையால், அந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ""முத்துலட்சுமியுடன் திரைப்பட இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத்தீர்வு காண வேண்டும். மனு மீதான விசாரணை வியாழக்கிழமை மீண்டும் நடைபெறும்'' என்று கூறினர்.

அப்போது வழக்குரைஞர் கே.கே. மணி, ""வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தமிழக திரையரங்குகளில் "வன யுத்தம்' படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், ""நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை காத்திருங்கள்'' என்றனர். இதனால், இந்த படம் திட்டமிட்டபடி வியாழக்கிழமை காலை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விழுப்புரம் கோர்ட்டில் ராமதாஸ் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
» வன யுத்தம் - ஒன்றரை கோடி கேட்கும் முத்துலட்சுமி
» ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மீது மோசடி புகார்: போலீசார் விசாரணை
» களஞ்சியம் அவதூறு புகார் மீது அஞ்சலியிடம் விரைவில் விசாரணை
» குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum