தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண் குழந்தை தரும் சேது தீர்த்தம்

Go down

ஆண் குழந்தை தரும் சேது தீர்த்தம் Empty ஆண் குழந்தை தரும் சேது தீர்த்தம்

Post  amma Fri Jan 11, 2013 12:46 pm


ஆண் குழந்தை தரும் சேது தீர்த்தம்

பாம்பன் நீர் இணைப்பில் தெற்கே இருந்து வடக்கே நீர் மின்னோட்டம் செல்கிறது. இத்தீவின் தென்புறத்தில் மேற்கே இருந்து கிழக்காக நீர் மின்னோட்டம் ஓடுகிறது. தனுஷ்கோடி முனையருகே தெற்கில் இருந்து மின்னோட்டம் வடக்கே பாய்கிறது. இத்தீவின் வடகரைப் பக்கம் கிழக்கே இருந்து மேற்கே நீர் மின்னோட்டம் செல்கிறது.

இதனால் காந்த சக்தி பெருகி வளர்கிறது. இவ்வாறு சேதுவில் நான்கு திசையிலும் ஈர்ப்பு மிகுந்து மின்னோட்டம் காணப்படுவதால் நோய்க்கு மருந்தாகவும் குழந்தைப் பேறுக்குக் காரணமாகவும் அமைகிறது. குழந்தையற்றவர்களுக்குக் குழந்தையும் ஆண் குழந்தை இல்லாதவர்க்கு ஆண் குழந்தையும் தருவதைக் காந்த சிகிச்சை நிரூபணம் செய்துள்ளது.

உடம்பின் அணுப் பகுதிகளில் காந்த சக்திக் குறைவதே குறைபாடுகளுக்குக் காரணம். அதை நிரப்புவதே காந்த சிகிச்சையாகும். இதனை சேது தீர்த்தம் இறையருளால் இயற்கையாகவே செய்து தருகிறது. காந்தங்களின் இந்த ஈர்ப்புச் சக்தியால் ரசாயன மாற்றம் நிகழ்வதுண்டு.

பால், பழச்சாறு, தண்ணீர், மருந்து, ரத்தம், உடல் சுரப்பி நீர்கள் ஆகியவற்றில் காந்தம் அதிசயிக்கத்தக்க மாறுதல்களைத் தருகிறது. காந்தம் பாய்ச்சிய நீர் துருப்பிடித்த இரும்பைச் சுத்தி செய்யும். நீரைப் பல நாள் கெடாமல் காக்கும். ஆகவே ராமேஸ்வரம், தங்கச்சிமடம் ஆகியவற்றின் நடுவே நல்ல தண்ணீர் கிடைப்பதற்கும் இக்காந்த மின்னோட்டத்தின் ரசாயன மாற்றமே காரணம் எனலாம்.

இறைவன் அருளால் ஓரிடத்தில் இப்படி அமைந்ததை விஞ்ஞானம் காந்த சக்தி என்று கூறுகிறது. சேதுவில் காந்த மின்னோட்ட மகிமையைத் திரிகால ஞானத்தாலும், யோக சாதனத்தாலும் உணர்ந்த பெரியோர் 64 தீர்த்தங்களில் சேது மகிமை அடங்கி இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார்கள். இப்போது 51 தீர்த்தங்களையே நாம் அடையாளம் காண்பதற்கு வாய்ப்பாக உள்ளது.

இன்னும் 13 சரியாக உணரப்படவில்லை. இப்பகுதி முழுவதும் பரவிய அறிவியல் காரணத்தை, நம் யோகிகள் மெய்ஞ்ஞானத்தால் அறிந்ததை வியக்காமல் இருக்க முடியவில்லை. சேது என்பது வேதாரண்யம், கோடியக் கரையில் தொடங்கி தனுஷ்கோடியில் முடிவதாகக் கொள்ளலாம். முத்துப் பேட்டை, மணமேற்குடி, தொண்டி ஆகிய இடங்களிலும் கடலை நெருங்கும் கோடிகள் இருப்பதைக் காணலாம். இவ்வூர்களில் கடல் நீராட்டு இன்றும் சிறப்பாகவே நடத்தப்படுகிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum