தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலை விட ஆழமானது

Go down

கடலை விட ஆழமானது Empty கடலை விட ஆழமானது

Post  birundha Sat Mar 16, 2013 8:49 pm

* தெய்வத்தின் தலையில் சுமையைப் போட்டு விடுங்கள். கவலை,பயம் என்னும் இருநாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்கி விடாதீர்கள். சந்தோஷமாகப் பாடிக்கொண்டே பணிகளைச் செய்யுங்கள்.
* பெரிய மனுஷத்தன்மைக்கும், உடல் உழைப்புக்கும் விரோதம் என்று நம்மவர்களில் சிலர் எண்ணிக் கொள்கின்றனர். சொற்ப பணக்காரன் கூட தனக்கொரு பணியாளை வைத்துக் கொண்டு பாயோடு கிடக்கும் கிழவி போல நடந்து கொள்கிறான். அவரவர் வேலையை அவரவர் செய்வதே சுகம்.
* எப்போதும் பாடுபட்டுக் கொண்டே இருங்கள். உழைப்பை விட சுகம் தரும் விஷயம் வேறொன்று கிடையாது.
* கடலின் ஆழத்தைக்கூட அளந்து பார்த்திருக்கின்றனர். ஆனால், உள்ளத்தின் ஆழத்தை அளப்பது அதை விட பலமடங்கு கஷ்டம். இருந்தாலும் சோர்ந்து போகாமல் உள்ளத்தை ஆராயுங்கள்.
* உள்ளத்தில் உறுதி, எப்போதும் மகிழ்ச்சி, நிர்வகிக்கும் ஆற்றல், தன்னம்பிக்கை, சரீர உழைப்பு முதலிய நல்ல குணங்களை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum