தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வறுமையால் கள்ளி பால் கொடுப்பது அந்த காலம்… கள்ள காதல் உல்லாசத்துக்காக விஷம் கொடுப்பது இந்த காலம்!

Go down

வறுமையால் கள்ளி பால் கொடுப்பது அந்த காலம்… கள்ள காதல் உல்லாசத்துக்காக விஷம் கொடுப்பது இந்த காலம்! Empty வறுமையால் கள்ளி பால் கொடுப்பது அந்த காலம்… கள்ள காதல் உல்லாசத்துக்காக விஷம் கொடுப்பது இந்த காலம்!

Post  meenu Sat Mar 16, 2013 12:37 pm

முன்னைய காலங்களில், பெண் பிள்ளை பிறந்தால் அதனை வளர்த்து, சீர் செனத்தி செய்து கட்டி வைக்க கஷ்டம் என்று அக் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லுவார்கள்.

அந்த காலம் மலையேறிப்போய், தற்போது கள்ள காதலனுடன் உல்லாசம் அனுபவிப்பதற்காக தன் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளார் இக் கொடூர தா(பே)ய்.

தர்மபுரி மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் உ‌ள்ள பொம்மிடி அருகே வாசிக்கவுண்டனூரை சேர்ந்த வெங்கடாசலம்எ‌ன்பவ‌ரி‌ன் மகன் குமாரு‌க்கு‌ம் (25), கடத்தூர்அருகேயு‌ள்ள வேடியூரை சேர்ந்த காசி – உமா தம்ப‌திய‌ரின் மகள் லட்சுமி‌க்கு‌ம் (21) ஒ‌ன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது‌.

கணவ‌‌‌ர் காசி இற‌ந்ததா‌ல் த‌னிமை‌யி‌ல் வா‌டிய உமாவு‌க்கு மக‌‌ள் ல‌ட்சு‌மி அடை‌க்கல‌ம் கொடு‌த்து‌ள்ளா‌ர். ஆன‌ா‌ல் வே‌லியே ப‌யிரை மே‌‌ய்‌ந்த கதை போல, பெ‌ற்ற மக‌ளி‌ன் கணவ‌ர் அதாவது மருமக‌ன் குமாரு‌ட‌ன் க‌ள்ள‌க்காதலை வள‌ர்‌த்து‌க் கொ‌ண்ட உமா, உ‌ல்லாச வா‌ழ்‌க்கை வா‌ழ்‌ந்து வ‌ந்து‌ள்ளா‌ர்.

‌நீ‌ண்ட காலமாக அர‌ங்கே‌றி வ‌ந்த க‌ள்ள‌க் காதலு‌க்கு மக‌‌ள் ல‌ட்சு‌மி தடையாக இரு‌‌ந்து‌ள்ளா‌ர். இதனா‌ல், மருமக‌ன் குமாருட‌ன் சே‌ர்‌ந்து மகளையே கொலை செ‌ய்ய ‌‌தி‌ட்ட‌‌‌‌ம் ‌தி‌ட்டினா‌‌‌ர் உமா. அ‌ண்மை‌யி‌ல்‌திடீரென லட்சுமிக்கு உடல் ‌நிலை பலவீனமாக இருப்பதாகக் கூறி கணவர் குமார், உமா ஆகியோர் மூலிகை டானிக் வாங்கி கொடுத்து‌ள்ளனர்.

இ‌ந்த டா‌னி‌‌க்கையை லட்சுமி, மாமனார் வெங்கடாசலம், மாமியார் லட்சுமி ஆகியோரும் குடி‌த்தன‌ர். ஆனா‌ல் ல‌ட்சு‌மி‌க்கு கொடு‌த்த டா‌‌னி‌க்‌கி‌ல் ‌விஷ‌ம் கல‌ந்து கொடு‌த்தன‌ர் குமாரு‌ம், உமாவு‌ம். வ‌யிறு கா‌ந்தலுட‌ன் தர்மபுரி அரசுமரு‌த்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் ல‌‌ட்சு‌மி உ‌யி‌‌ர் ‌பி‌ரி‌ந்தது.

இது குறித்த புகா‌‌‌ரி‌ன் பே‌ரி‌ல் பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அ‌ப்போது, ல‌ட்சு‌மி‌ கணவ‌ர் குமா‌ர், தாயா‌ர் உமா ‌மீது காவ‌ல்துறை‌க்கு ச‌ந்தேக‌‌ம் வலு‌த்ததை தொட‌ர்‌ந்து இருவ‌ரிட‌ம் ‌விசாரணை நட‌த்‌தின‌ர். ஆனா‌ல், முத‌லி‌ல் உ‌ண்மையை மறை‌த்த இருவரு‌ம் ‌பி‌ன்ன‌ர், மகளை ‌விஷ‌ம் கொடு‌த்து கொ‌ன்றதை ஒ‌ப்பு‌க் கொ‌ண்டா‌ர் உமா. இத‌ற்கு உட‌ந்தையாக இரு‌ந்த ல‌ட்சு‌மி கணவரை குமாரையு‌ம் ‌போ‌லீ‌ஸ் கைதுசெய்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum