தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கதையை திருடி விட்டதாக மேஜர் ரவி மீது கதாசிரியர் புகார்

Go down

கதையை திருடி விட்டதாக மேஜர் ரவி மீது கதாசிரியர் புகார்  Empty கதையை திருடி விட்டதாக மேஜர் ரவி மீது கதாசிரியர் புகார்

Post  ishwarya Thu Mar 14, 2013 3:05 pm

திருவனந்தபுரம் : இயக்குனர் மேஜர் ரவி மீது, மலையாளப் பட கதாசிரியர் ரெஜி மாத்யூ கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். தமிழில், ஜீவா, மோகன்லால் நடித்த ‘அரண்’ படத்தை இயக்கியவர் மேஜர் ரவி. மலையாள படங்களை இயக்கி வரும் அவர், தற்போது மோகன்லால் நடிப்பில் ‘கர்மயோதா’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் ஆனால் மேஜர் ரவி எனது பெயரை இருட்டடிப்பு செய்துவருகிறார் என்றும் கதாசிரியர் ரெஜி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுபற்றி மேஜர் ரவியிடம் கேட்டபோது முற்றிலுமாக மறுத்தார்.

அவர் கூறும்போது, ‘உண்மையில் அந்த கதையை என்னிடம் இருந்து ரெஜிதான் திருடிவிட்டார். அவர் எனக்கு உதவி செய்துகொண்டிருந்தவர். போன வருட டிசம்பரில் இந்த கதையை ரெஜி பார்த்தார். பிறகு மோகன்லால் நடிக்கிறார் என்றதும் கதையை முழுமையாக மாற்றினேன். நான் கரெக்ஷன் செய்த பேப்பர்களை திருடி வைத்துக்கொண்டு அவர் கதை போல சொல்லி வருகிறார். இந்த பிரச்னை வருவதற்கு முன்பே கதையை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன். இதை தெரிந்துகொண்ட ரெஜி, தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறிக்கப் பார்த்தார். அது முடியவில்லை என்றதும் வழக்குத் தொடர்ந்துள்ளார்’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum