தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மக்களுக்கு சட்டத்தை கற்றுத்தர வேண்டும் : திவ்யா கோபம்

Go down

மக்களுக்கு சட்டத்தை கற்றுத்தர வேண்டும் : திவ்யா கோபம்  Empty மக்களுக்கு சட்டத்தை கற்றுத்தர வேண்டும் : திவ்யா கோபம்

Post  ishwarya Wed Mar 13, 2013 6:20 pm

‘மக்களுக்கு சட்டத்தை கற்றுத்தர வேண்டும்‘ என்றார் திவ்யா. வாரணம் ஆயிரம், குத்து உள்ளிட்ட படங்களில் நடித்தவர் திவ்யா. இவர் கூறியதாவது:
டெல்லி மாணவி பலாத்கார சம்பவம் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரை நாம் எப்போதோ இழந்துவிட்டோம். அதாவது பலாத்காரம் நடத்தப்பட்டபோதே அவரை இழந்துவிட்டோம். ஒருபக்கம் மாணவிக்கு நீதி கிடைக்க போராடிக்கொண்டிருக்கிறோம். மறுபக்கம் பலாத்கார சம்பவங்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. டெல்லி பகுதியிலேயே 3 வயது சிறுமியை ஒரு கூட்டம் பலாத்காரம் செய்தது, கடலூரில் இன்னொரு பெண் பலாத்காரம். ஒருபக்கம் சட்டத்தை காப்பதற்காக போராட்டம் நடக்கிறது.

இன்னொரு பக்கம் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களை எந்த கவலையும் இல்லாமல் ஒரு கூட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது. இது சட்டம் வலிமையானதாக இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. கல்வி பற்றி மக்கள் பேசுகிறார்கள். கல்வி மட்டும்போதாது அவர்களுக்கு சட்டம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். இதை விழிப்புணர்வு மூலமே ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று இதற்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும். சமீபகால போராட்டங்கள் மக்களின் கோபத்தை வெளிப்படுத்துகிறது. இதனை மீடியாக்கள் வெளிச்சம்போட்டு மக்களிடம் கொண்டு செல்லாவிட்டால் எந்த மாற்றமும் நிகழாது. மாற்றத்தை கொண்டு வரும் சக்தி மீடியாக்களிடம்தான் இருக்கிறது. ஜெசிகா லால் வழக்கில் அவர்கள் செய்த பணிபோல் இந்த பணி தொடர வேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum