தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெசன்ட்நகர் ஸ்ரீ பைண்டி அம்மன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

Go down

பெசன்ட்நகர் ஸ்ரீ பைண்டி அம்மன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் Empty பெசன்ட்நகர் ஸ்ரீ பைண்டி அம்மன் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

Post  meenu Fri Mar 08, 2013 1:22 pm

சென்னை: பெசன்ட்நகர் ஓடைமாநகர், ஓடைகுப்பம், பழைய ஓடைகுப்பம் மீனவர் பகுதியில் உள்ள ஸ்ரீ பைண்டி அம்மன் கோயி லில் விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீ பைண்டி அம்மன் முதல் பரிவார தேவதைகளுக்கு இன்று காலை 9 முதல் 10.30க்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. வரும் 28ம் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெறும். ஐயப்ப சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்திவைக்கிறார். மண்டல அபிஷேகம், 108 பால்குடம் எடுத்தல், காப்பு கட்டுதல், கரகம் புறப்பாடு, தினமும் இரவு இசைநிகழ்ச்சி உண்டு.

ஸ்ரீ பைண்டி அம்மன் கோயில் மிக பழமைவாய்ந்தது. கடலில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சுயம்பு வடிவம் கொண்டது. இப்போதும் அம்மனுக்கு தாய்வீட்டார் பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. 1700ல் முதல் கும்பாபிஷேகம் நடந்தது. இப்போது புது மண்டபம், வேலைப்பாடுகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு அண்ணன் கோயில் வடகிழக்கே உள்ளது. அது ஆச்சி காட்டார் என அழைக்கப்படுகிறது. தென்கிழக்கில் கன்னி கோயில் அமைந்துள்ளது.

2004ல் ஏற்பட்ட சுனாமியில் இக்கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் சக்தியுடன் விளங்கியது. இதனருகே லட்சுமிகோயில், வேளாங்கன்னி, அருட்படை முருகன் கோயில் அமைந்துள்ளன. தல விருட்சமான வேம்பை தரிசித்தால் வேண்டிய வரங்களை பெறலாம். பக்தர்கள் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு அம்மன் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum