தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வவுனியாவில் சகோதரத்துவத்துக்கான மக்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

Go down

வவுனியாவில் சகோதரத்துவத்துக்கான மக்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம் Empty வவுனியாவில் சகோதரத்துவத்துக்கான மக்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம்

Post  meenu Sat Mar 02, 2013 12:26 pm

அராஜகப் போக்கை நிறுத்தி வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி ''சகோதரத்துவத்திற்கான மக்கள் அரண்'' என்ற அமைப்பு வியாழனன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றது.

ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.

வடபகுதியில் இடம்பெற்று வருகின்ற பொதுமக்களின் காணி அபகரிப்பு, சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, ஆட்கள் கடத்தப்படுவது மற்றும் காணாமல் போவது போன்றவற்றை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அரசாங்கத்தின் அராஜகப் போக்கு, இனவாதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என்பன குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே, தாங்கள் இத்தகைய ஆர்ப்பாட்டப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரனும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆர்யா படத்துக்கு செருப்பு மாலை… இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
» விழாக்களில் ஆபாச உடை: நடிகை சோனாவுக்கு எதிராக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்; இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
» வவுனியாவில் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை' - சிவசக்தி ஆனந்தன்
» வவுனியாவில் இரவு வகுப்புகளும் கைவிடப்பட்ட சட்ட நடவடிக்கைளும்
» வவுனியாவில் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை' - சிவசக்தி ஆனந்தன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum