நந்திக்கு பால் அபிஷேகம்
Page 1 of 1
நந்திக்கு பால் அபிஷேகம்
பிரதோஷ காலத்தில் முதலில் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்து அலங்கரித்து, அரிசி மாவினால் அகல் செய்து தூய்மையான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி, அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
பிரதோஷ கால அபிஷேக முறையில் "பால் அபிஷேகம்'' என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆகவே, பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து இயன்றளவு பால் கொண்டு வந்து கொடுத்து அபிஷேகத்தில் கலந்து கொள்வது சிறப்பான பலனைத்தரும்.
அத்துடன் தாய்மார்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு முறையாக கோவிலை ஒரு முறை வலம் வந்து, பிறகு அக்குடங்களில் உள்ள பாலைக்கொண்டே அபிஷேகம் செய்வது என்பது மிகவும் சிறப்பான பலனைத்தரும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum