தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

Go down

காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் Empty காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

Post  ishwarya Sat Feb 16, 2013 12:46 pm

தண்டையார்பேட்டை: சென்னை பாரிமுனை மண்ணடி தம்பு செட்டி தெருவில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோயில் உள்ளது. சுமார்400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு கடந்த 1672ம் ஆண்டு மன்னர் வீர சிவாஜி வந்து வழிபட்டு சென்ற பெருமை உள்ளது. இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 11ம் தேதி கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று காலை 9 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. சிவசண்முக ஞானாச்சாரிய குருசாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கங்கையில் இருந்து கொண்டு வந்த 1500 லிட்டர் புனித நீர், பம்பை, யமுனையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை கோயில் கோபுர கலசத்தில் ஊற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

இதில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, ராஜேந்திர பாலாஜி, மேயர் சைதை துரைசாமி, பழ. கருப்பையா எம்எல்ஏ, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தனபால் முத்தையா, ராஜா, திருமகள், கவிதா, ஜோதிலட்சுமி மற்றும் கோயில் நிர்வாக அறங்காவலர் சுப்பிரமணிய ஆச்சாரி, அறங்காவலர்கள் மூர்த்தி, பஞ்சாட்சரம், ஜெகதீசன், வேணுகோபால், திருப்பணி கமிட்டி தலைவர் ஏழுமலை, ராமையன், காளிதாஸ் சிவாச்சாரியார், திருப்பணி கமிட்டி உறுப்பினர் ஜெயபால், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கோயிலில் சமபந்தி போஜனம் நடந்தது. இந்த விழாவில் சென்னை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum