தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனம் விட்டு பேசுங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும் !

Go down

மனம் விட்டு பேசுங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும் ! Empty மனம் விட்டு பேசுங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும் !

Post  ishwarya Tue Feb 12, 2013 1:50 pm

How to Improve Family Relationships
கூட்டுக்குடும்பங்களால் வாழ்ந்தவர்கள் பலரும் இன்றைக்கு கருத்து வேறுபாடுகளினால் தனித் தனி குடும்பமாய் மாறிவருகின்றனர். இதற்கு காரணம் அவசர யுகத்தில் ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்ளமுடியாததே. ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்ளாத காரணத்தினால் இடைவெளிகள் ஏற்படுகின்றன. இந்த இடைவெளிகளே நாளடைவில் விரிசலுக்கு காரணமாகின்றன. ஆனால் ஒருசில குடும்பங்களில் வசிப்பவர்கள் இன்றைக்கும் ஒற்றுமையுணர்வோடு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதற்குக் காரணம் விட்டுக்கொடுத்தல் என்ற மந்திரமே. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒன்றாக அமர்ந்து பேசினாலே உறவுகளில் விரிசல்கள் விழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். குடும்ப உறவுகளை தக்கவைத்துக்கொள்ள அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்கள்.

விட்டுக்கொடுங்கள்

குடும்பம் என்றாலே ஏதாவது சண்டைச் சச்சரவுகளும் மசக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான்.

சூழ்நிலையை சமாளிங்க

குடும்பங்கள் கூடி மகிழ்கின்ற தருணங்களிலும் பிரச்சனைகள் எழலாம், இதை முன்கூட்டியே எதிர்பார்த்து அவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்கும் மனப்போக்கையும் வளர்த்து வருவது மிகவும் நல்லது. இதனால் யார் என்ன பேசினாலும் கேலி செய்தாலும் அவை நமது மனதை அதிகம் பாதிக்காது.

பாசமான சந்திப்புகள்

குடும்ப உறவுகள் எப்போதும் ஏதாவது விசேஷங்களில் மட்டும் கூடுவதற்கு பதிலாக எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி குடும்பத்தாரரை பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களை சந்திக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.

மனம் விட்டு பேசுங்கள்

குடும்ப உறவுகளோடு அடிக்கடி ஒன்றாகக் கூடி சுற்றுலா பயணம் மேற்கொள்வது குடும்பங்களுக்குள் மகிழ்ச்சியைக் கூட்டும் மனக்கசப்புகளையும் மறக்கடிக்கச் செய்யும். அதைபோல் குடும்ப உறவுகள் அடிக்கடி உணவகங்களில்கூட விருந்துகள் ஏற்பாடுச் செய்து குடும்பமாக சென்று உண்டு மகிழலாம். அவ்வாறான தருணங்களில் ஒன்றாக அமர்ந்து பேசி அவரவர்களுக்கு இடையே தோன்றும் எண்ணங்களை மனம் விட்டு பேசலாம். இதனால் கசப்பான கருத்து வேறுபாடுகள் மறையும்.

இதனால் குடும்பங்களை மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவலைத் அதிகரிக்கும்.

கோபத்தை மறக்கலாம்

புதிதாய் குடும்பப்படம் வெளிவரும் போது தங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை அவர்கள் எதிர்ப்பாராத வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒன்றாகச் சென்று கண்டு களிப்பது குடும்பங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளும் கோபமும் கூட மறையச் செய்து விடும்.

உறவுகளுக்கு முதலிடம்

குடும்பத்தில் எதிர்பாராமல் துன்பம் வந்தால் முதலில் உறவுகளைத்தான் தேடி ஓட வேண்டும் மற்றவரெல்லாம் அதன் பிறகு தான். ஆனால் சிலர் அதை தவிர்த்து நண்பர்களையும் இன்னும் தெரிந்தவர்களையும் தான் உதவிக்கு நாடுவார்கள். இது முற்றிலும் தவறானது, நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் வாழ நாள் முழுவதும் ஊடவே வருவது குடும்ப உறவுகளே, ஆகவே எப்போதும் முதலிடம் அவர்களுக்குத் தான் என்று கருத வேண்டும்.

உறவுகளை நேசியுங்கள்

குடும்பத்தில் பிரச்சினைகள் எழாமல் இருக்க முதலில் உறவுகளை நேசியுங்கள். அன்பும், நேசமும் இருந்தாலே சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. அப்புறம் அவர்களின் கருத்தை நாம் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளலாம். நமது சொந்த உடலுறுப்புகளே ஒன்றுபோல் இருப்பதில்லை. நமது கையின் விரல்கள் ஐந்தும் ஐந்துவிதமாய் இருக்கின்றன. அதேபோல்தான் குடும்ப உறவுகளும். இதனை உணர்ந்து உறவுகளை மதிக்க தெரிந்தாலே அக்குடும்பத்து உறவுகளில் பிணக்கம் ஏற்படவே வாய்பிருக்காது.

எனவே குடும்ப உறவுகளின் மகத்துவம் அறிந்து அவற்றை புதுபித்துக் கொண்டே வருவோமானால் உறவினர்களுக்குள் அவ்வபோது உண்டாகும் மனக்கசப்புகள் நிச்சயம் மறையும். இவ்வாறான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் நமது சந்ததியினருக்கும் குடும்ப உறவுகளின் பெருமை தெரியும். நமக்கும் வருங்காலத்து வாரிசுகளை ஒரு வலுவான குடும்பச் சூழ்நிலையில் தான் வளர்த்தோம் என்ற ஆத்ம திருப்தி கிடைக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விட்டுக்கொடுங்கள் குடும்பத்தில் ஒற்றுமை தழைக்கும்!
» மாலை வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உ
» மனம் விட்டு சிரிங்க...
» மனைவியை அடிக்கடி மனம் விட்டு பாராட்டுங்க !
» மனம் நிறைந்த மகிழ்ச்சி அருள்வாள் மகிமை மாதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum